கபிலர் |
- வருக மன்னவா.! அதோ அந்த மலைச்சரிவின் பின்னால்தான்
கலைவிழா.
|
பாரி |
- எங்கே...?
|
கபிலர் |
- முதலில் செவி மடுங்கள். குழல் இசைக்கிறதா?
|
பாரி |
- அட ஆமாம்.!
|
கபிலர் |
- அப்புறம்..... முழவு..? |
பாரி |
- ஆமாம். நல்ல இசை. |
கபிலர் |
- கூடவே, யாழிசை. |
பாரி |
- ஆமாம்... ஆமாம்.! |
கபிலர் |
- கொம்பொலி...?
|
பாரி |
- பொருத்தமாய் விட்டுவிட்டு ஒலிக்கிறதே. இந்த இனிய இசைக்கு நாட்டியமாடும் விறலி யாரோ?
|
கபிலர் |
- பார்க்கலாமா? |
பாரி |
- பார்த்துக் களிக்கும் பார்வையாளர்கள்? |
கபிலர் |
- நிறைய இருக்கிறார்கள். அவர்களைத் தொல்லைப்படுத்தாமல் நாம் பார்க்க வேண்டும். |
பாரி |
- ஆமாம். மன்னரும் புலவரும் வந்தார்கள் என்று அவர்கள் கலையை மறந்து நம்மைக் கவனித்துவிடக் கூடாது இல்லையா, கபிலரே.! |
கபிலர் |
- ஆமாம்... மெல்ல.. மெல்ல இந்த மலைச்சரிவைத் தொடர்ந்து வாருங்கள். (மெல்ல முன்னேறுகிறார்கள்) (மெல்லத் திரும்பியபின்) |
பாரி |
- என்ன... யாரும்...? |
கபிலர் |
- உசு..... அமைதியாய் அங்கே பாருங்கள் விறலி ஆடுகிறாள். (கபிலர் சுட்டும் திசையில் கோல மயில் ஆடிக்கொண்டிருக்கின்றாள்.) |
பாரி |
- ஆ.. ஆமாம்.!
|
கபிலர் |
- இதோ பார்வையாளர்கள் தங்களுக்கு வசதியான இருக்கைகளில்... (மரக்கிளைகளில் குரங்குகள் கூட்டமாய்க் குடும்பத்துடன்) |
பாரி |
- ((வியப்பு குன்றாமல்) அட ஆமாம்..!
|
கபிலர் |
- குழல் இசைப்பது அதோ அந்த நெடியவன்தான்! (சுட்டும் திசையில் மூங்கில் மரங்கள். வண்டு துளைத்த அந்த மூங்கில் துளை வழியே புகுந்தக் காற்று புல்லாங்குழல் ஒலியாக மலை எங்கும் மெல்ல எதிரொலிக்க ஒலிக்கிறது) |
கபிலர் |
- ஓ.....!
|
பாரி |
- அதோ அந்தப் பாறைகளின் மீது அலைக்-கைகள்கொண்டு முழவு இசைப்பது |
கபிலர் |
- அருவி.
|
பாரி |
- கொம்பொலி தருவது. |
கபிலர் |
- மான்களின் கூட்டம்.
|
பாரி |
- ஓ! மலர்களைச் சூழ்ந்த வண்டுகள் இசைப்பதுதான் யாழா? இனிமை கபிலரே இனிமை. இப்படி ஓர் இசையினை நுகர்வது என் பேறுதான்.. என்ன செய்ய வேண்டும் இந்தக் கலைஞர்களுக்கு? ஏதாவது கொடுத்தாக வேண்டுமே...! |
கபிலர் |
- வள்ளலே உமது இயல்பு இந்தக் கலைஞர்களிடம் செல்லாது.
|
பாரி |
- எப்படி? |
கபிலர் |
- இயற்கைக்குக் கொடுத்துதான் பழக்கம். உம்மைப்போலவே.
|
பாரி |
- இந்தக் கலைஞர்களைப் போற்றி நான் என்னப் பரிசில் கொடுப்பது? |
கபிலர் |
- நீ மன்னனாய் இருந்து காத்தலே பரிசுதான். இயற்கையில் வளரும்
உயிரினங்களுக்கு உனது காவல்தானே பரிசு மன்னவா!
|
பாரி |
- ஆனாலும்..... |