Primary tabs
பாடம் - 5
A05135 நாயக்கர் காலத் தமிழ்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இதனைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்:
•நாயக்கர் காலத்தில் எழுந்த இலக்கிய இலக்கண நூல்கள் பற்றிய செய்திகளை அறியலாம்.•அக்காலக் கட்டத்தில் தமிழ்மொழியில் எழுந்த ஒலி மாற்றங்களைச் சான்றுகளுடன் உணர்ந்து கொள்ளலாம்.•தமிழ்மொழியின் பல்வேறு இலக்கணக் கூறுகள் முந்தைய தமிழ் வழக்கிலிருந்து மாறும் விதங்களைச் சில சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.•ஐரோப்பியர் வருகையால் தமிழில் தோன்றிய உரைநடை வழக்கையும், வீரமாமுனிவர் தமிழ் வரிவடித்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும் அறிந்து கொள்ளலாம்.•நாட்டுப்புற மொழியியலின் போக்கும் விளக்கப்படுவதால், தமிழ் இலக்கியத்தில் உரைநடை வடிவம் மற்றும் பேச்சு மொழியின் தாக்கம் ஆகியவற்றை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.