Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
வெய்யைபோல முயங்குதி - என்னும் கூற்று உணர்த்தும் உணர்ச்சிச் சூழலை எடுத்துக்காட்டுக.
பரத்தையை நாடிச் சென்று திரும்பிய தலைவன், தலைவியின் ஊடலை நீக்கக் கருதி அவளைத் தழுவிக் கொள்கிறான். அப்போது தான் தலைவி வெய்யை போல முயங்குதி என்கிறாள். (வெய்யை = விருப்பமுடையவன், முயங்குதி= தழுவுகிறாய்) அவன் பொய்யன் என்பதை நேரடியாகச் சொல்லி அவன் மீது தனக்குள்ள சினம் ஆறாது என்பதைத் தலைவி வெளிப்படுத்தும் இடம் இது.