தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

துறவறம்

  • 3.7
    துறவறம்

    கற்பு வாழ்வின் முடிவாக - நிறைவாக - பயனாகத் தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் துறவறம் பற்றிய நூற்பா கீழ் வருமாறு:-

    மக்களொடு மகிழ்ந்து, மனையறம் காத்து,
    மிக்க காம வேட்கை தீர்ந்துழித்
    தலைவனும், தலைவியும் தம்பதி நீங்கித்
    தொலைவில் சுற்றமொடு துறவறம் காப்ப (116)

    இதன்படி,

    • மக்களைப் பெற்று மகிழ்தல்
    • இல்லறத்திலிருந்து ஏனைய அறம் புரிதல்
    • காம வேட்கையைத் தீர்த்துக் கொள்ளுதல்

    இவையாவும் நிகழ்த்திய பிறகு தலைமக்கள் தம் ஊரை விட்டு நீங்கி, ஆனால் சுற்றத்தினரை விட்டு நீங்காமல் மேற்கொள்ளும் பற்றற்ற வாழ்வே துறவறம் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 14:28:24(இந்திய நேரம்)