தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 3.8
    தொகுப்புரை

    இப்பாடத் தொகுப்பிலிருந்து பின்வரும் செய்திகளைக் கற்று உணர்ந்தோம்:

    • களவில் நிகழும் புணர்ச்சிகள்.
    • உள்ளப் புணர்ச்சியே முதன்மை இடம் பெற்ற தன்மை; அதற்கான காரணம்.
    • வரைவு மேற்கொள்ளும் முறைகள்.
    • அறநெறிப்படுத்தும் உயர் செயலாகிய அறத்தொடு நிற்றல்.
    • கற்பு வாழ்வின் அமைப்பும் அவ்வாழ்வில் மேன்மேலும் தலைவன் மேற்கொள்ளும் புணர்ச்சிகளும்.
    • களவிலும், கற்பிலும் தலைவன் நிகழ்த்தும் பிரிவுகள்.
    • பிரிவை மேற்கொள்வோர்க்குரிய வரையறுக்கப்பட்ட சிறப்புச் செய்திகள்.
    • தலைமக்கள் இருவரிடமும் மகிழ்ச்சியை நிலைபெறச் செய்ய வழி மேற்கொள்ளும் வாயில்களாக வருபவர்களின் செயல்பாடுகள்.
    • துறவறம் பற்றிய வரையறை.

    இச்செய்திகள் மூலம் பண்டைத் தமிழர் மேற்கொண்ட பண்பட்ட அகவாழ்வினை அறிய முடிகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள்-II

    1.
    கற்பின் இரு வகைகள் யாவை?
    2.
    கற்பில் நிகழும் பிரிவின் வகைகள் யாவை?
    3.
    காவல் பிரிவை விளக்குக
    4.
    ஊடல் தணிக்கும் வாயில்கள் யாவர்?
    5.
    துறவறம் பற்றி விளக்குக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 14:39:09(இந்திய நேரம்)