Primary tabs
- தன் மதிப்பீடு:விடைகள்-II3.காவல் பிரிவை விளக்குக.
பாதுகாத்தல் தொழிலை மேற்கொள்ள வேண்டி, தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வது காவல் பிரிவு எனப்படும். இது,
- அறப்புறம் காவல்
- நாடு, காவல் என இரு உட்பிரிவுகளை உடையது.
அறமன்றங்கள் முதலான இடங்களைப் பாதுகாப்பதற்காகத் தலைவன் மேற்கொள்ளும் இப்பிரிவு அந்தணர், அரசர், வணிகர், வளோளர் என்னும் நால்வர்க்கும் உரியது. பகைவர்களிடமிருந்து தன் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளும் இப்பிரிவு அரசருக்கு மட்டுமே உரியது.