Primary tabs
- இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
திறனாய்வின் முக்கியமான மூன்று அணுகுமுறைகளைப் பற்றி இப்பாடம் பேசுகிறது. அவை, உருவவியல் அணுகுமுறை, தத்துவவியல் அணுகுமுறை, அறநெறி அணுகுமுறை என்பனவாகும்.
இலக்கியத்திற்கு உருவம் அவசியமானது; எனவே உருவவியல் கொள்கை எத்தகையது என்பதை இப்பாடம் உணர்த்துகின்றது. வரலாற்றோடும் மனிதர்களின் பண்புகள் மற்றும் சிந்தனைகளோடும் இயற்கைச் சூழலோடும் தொடர்புடைய தத்துவம் என, இது உணர்த்துகின்றது.
இலக்கியத்தையும் மற்றும் பிறவற்றையும் அறநெறிக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது பற்றி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?-
திறனாய்வு முறையின் பல்வேறு அணுகுமுறைகளை அறிந்து கொள்ள முடிகிறது.
-
இதன் மூலம் இலக்கியத்தை நுட்பமாக ஆராய முடிகிறது.
-
இலக்கியத்தில் இலைமறை காயாகப் படைக்கப்பட்டுள்ள செய்திகளை வெளிக் கொணர முடிகிறது.
-
தத்துவவியல் மற்றும் அறநெறி அணுகுமுறைகளின் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது.
-