தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 2)
    விக்கிரம சோழன் உலாவில் காணும் கவிதைச் சிறப்பை விளக்க ஓர எடுத்துக்காட்டுத் தருக.

    மடந்தைப் பருவப் பெண்ணொருத்தி தன் தோழியுடன் பந்து விளையாடும் அழகைக் கற்பனை நயத்துடன் பாடுகிறார் ஒட்டக்கூத்தர். பந்துவிளையாடுவதால் அவள் கை சிவக்கும் என்று கூறுவது போல் அவள் வளைகள் ஒலித்தன. இடை வருந்தும் என்று கூறுவதுபோல் அவள் இடையில் அணிந்திருந்த மேகலை ஒலித்தது. சிற்றடி வருந்தும் என்று கூறுவதுபோல் காலில் அணிந்திருந்த சிலம்பு ஒலித்தது. இவ்வாறு பாடுகிறார் ஒட்டக்கூத்தர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 13:09:31(இந்திய நேரம்)