Primary tabs
-
பாடம் - 1d06131 இசை யமைதி
இந்தப் பாடம் இசையமைதி பற்றிக் குறிப்பிடுகின்றது. நான்கு பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றது.
இசை, பண் பற்றியும், சங்க இலக்கியப் பண் பற்றியும் தெளிவு படுத்துகின்றது.
தேவாரப் பண்கள் பற்றியும், பண்ணடைவில் தேவாரப் பதிகங்கள் இடம் பெற்றுள்ள நிலையைப் பட்டியலோடும் விளக்குகின்றது.
தாளம் பற்றியும், தூக்குப் பற்றியும், தாளத்தின் உயிர் நிலைகளைப் பற்றியும் எடுத்தியம்புகின்றது.
இசை - மிடற்றிசை, கருவியிசை என இருவகைப்படும். அவற்றில் தோல், துளை, நரம்பு, கஞ்சக்கருவிகள் பற்றி விளக்கம் அளிக்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- இசை, பண்
பற்றிய தொன்மையான நுட்பம்
தமிழர்களுக்கு உண்டு என்பதனை இதன் மூலம்
உணரலாம்.
- தொன்மையான
இசைவடிவில் அமைந்த பாவாகத்
தேவாரம் விளங்குவதனை உணரலாம்.
- இசையின்
தாய் தந்தையாகப் பண்ணும் தாளமும்
அமைந்துள்ள நுட்பத்தினைக் கண்டு மகிழலாம்.
- தாள வேந்தராகத்
திருஞான சம்பந்தரும் தாளச்
செல்வராக அருணகிரியாரும்
விளங்குவதனை
ஒப்பிட்டு அறியலாம்.
- நான்கு வகையான இசைக் கருவிகள் பற்றியும் அறிந்துணரலாம்.
- இசை, பண்
பற்றிய தொன்மையான நுட்பம்
தமிழர்களுக்கு உண்டு என்பதனை இதன் மூலம்
உணரலாம்.