Primary tabs
நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள்
காவல் தெய்வதம் தேவர்கோற்கு எடுத்த
தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்
மணிமே கலையொடு மாதவி வாராத்
தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வரச்
சித்திரா பதிதான் செல்லல்உற்று இரங்கித்
தத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி
வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப்
வயந்த மாலையும் மாதவி துறவிக்கு
அயர்ந்துமெய் வாடிய அழிவினள் ஆதலின்
மணிமே கலையொடு மாதவி இருந்த
அணிமலர் மண்டபத்து அகவயின் செலீஇ
ஆடிய சாயல் ஆயிழை மடந்தை
வாடிய மேனி கண்டுஉளம் வருந்திப்
பொன்நேர் அனையாய் புகுந்தது கேளாய்
வேத்தியல் பொதுஇயல் என்றுஇரு திறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும்
தண்ணுமைக் கருவியும் தாழ்தீங் குழலும்
கந்துகக் கருத்து மடைநூல் செய்தியும்
சுந்தரச் சுண்ணமும் தூநீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்துஉறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலர்ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும்
கற்றுத் துறைபோகிய பொன்தொடி நங்கை
நல்தவம் புரிந்தது நாண்உடைத்து என்றே
அலகுஇல் மூதூர் ஆன்றவர் அல்லது
பலர்தொகுபு உரைக்கும் பண்புஇல் வாய்மொழி
நயம்பாடு இல்லை நாண்உடைத்து என்ற
காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்
போதல் செய்யா உயிரொடு நின்றே
பொன்கொடி மூதூர்ப் பொருள்உரை இழந்து
காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி
ஊதுஉலைக் குருகின் உயிர்த்துஅகத்து அடங்காது
இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின்
நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்:
நளிஎரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன்உறை வாழ்க்கைக்கு நோற்றுஉடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து.
கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள்
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீர் ஆடிய கதிர்இள வனமுலை
திண்ணிதில் திருகித் தீஅழல் பொத்திக்
காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை
அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும்
ஆங்ஙனம் அன்றியும் ஆயிழை கேளாய்
ஈங்குஇம் மாதவர் உறைவிடம் புகுந்தேன்
மறவணம் நீத்த மாசுஅறு கேள்வி
அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து
மாபெருந் துன்பம் கொண்டுஉளம் மயங்கிக்
காதலன் உற்ற கடுந்துயர் கூறப்
பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிகென்று அருளி
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
மைத்தடங் கண்ணார் தமக்கும்என் பயந்த
சித்திரா பதிக்கும் செப்பு நீஎன,
ஆங்குஅவள் உரைகேட்டு் அரும்பெறல் மாமணி
ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று
மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும்
ஊர்
அலர் உரைத்த முற்றிற்று.