Primary tabs
-
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
3)
அகலிகை வெண்பாவில் அகலிகையின் அழகு எங்ஙனம் புனையப்பட்டுள்ளது?
திருப்பாற்கடலில் இருந்து அமுது தோன்றிய போது அந்த உருவைக் கொண்டு வந்தது போன்று முற்றிய அழகை உடையவள்.
அவள் முகம் மதியை ஒத்திருந்தது; அவள் குளிர்ச்சி பொருந்திய கண்கள் அம்மதியில் உள்ள மானை ஒத்திருந்தன. அவன் மொழி மதி பொழியும் அமுதை ஒத்துள்ளது; ஆம்பல் மலரை ஒத்த வாயிதழ்களின் உள்ளே உள்ள பற்கள் மதியில் விளையும் முத்தைப் போல் ஒளி சிந்தின. மின்னலைப் போன்று அழகுடைய அவள் புருவங்கள் மன்மதனின் கையில் உள்ள கரும்பு வில்லை ஒத்துள்ளன. அவள் கண்கள் மன்மதனின் கையில் உள்ள பூங்கணைகளை ஒத்துள்ளதால் அவளுக்கு வில்லும் அம்பும் மிகையானவை ஆகும்.