தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    இப்பாடத்தில் சங்க கால மன்னர்களைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சங்க காலத்தில் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது என்றும், அவர்களின் ஆட்சிக்கு இடையே குறுநில வேந்தர்களும் தன்னாட்சி நடத்தி வந்தனர் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

    சேர மன்னர்களைப் பற்றி விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சேர மன்னர்கள் இமயம் வரை படையெடுத்து வெற்றி வாகை சூடினர் என்பது பற்றியும், சோழ மன்னரும் அவ்வாறே வெற்றி கொண்டனர் என்பது பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

    குறுநில வேந்தர்கள் என்று கூறப்படும் வேளிர், கோசர் போன்றோர் தமிழகத்தின் வடதிசையில் இருந்து வந்து குடியேறினர் என்பது பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:22:27(இந்திய நேரம்)