Primary tabs
5.7 தொகுப்புரை
இப்பாடத்தின் மூலம் சங்க காலத்தில் தமிழகம் மூவேந்தர்களால் அரசாட்சி செய்யப்பட்டு வந்தது என்பதைப் பற்றிப் படித்து உணர்ந்திருப்பீர்கள். சங்க கால மன்னர்கள் வடதிசை நோக்கிச் செல்லும்போதெல்லாம் எதிர்கொண்ட வட இந்திய மன்னர்களை வென்று இமயம் வரை சென்றனர் என்பது பற்றிப் படித்தீர்கள். சங்க கால மன்னர்கள் சிறந்த ஆற்றல் பெற்றவர்கள் என்றும், போரிலும், கொடையிலும் புலமையிலும் சிறப்புற்றிருந்தனர் என்றும் அறிந்திருப்பீர்கள்.
மூவேந்தர்கள் மட்டுமன்றிக் குறுநில மன்னர்களும், வேளிர்களும் தமிழகத்தே ஆட்சி புரிந்து வந்தனர் என்றும் படித்து அறிந்தீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II