தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    இப்பாடத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    தமிழகத்தில் சங்க காலம் முதல் சேர, சோழ, பாண்டிய அரசுகளும், வட இந்தியாவில் மௌரிய அரசும் நல்ல முறையில் ஆட்சியை அளித்தன. அது போலவே பல்லவர்களும் நல்லதொரு ஆட்சியை மேற்கொண்டனர் என்பது பற்றிய செய்தி நமக்குக் கிடைக்கப்பெறுகிறது.

    பல்லவர்கள் காலத்தில் சமுதாயத்தில் பல்வேறு சாதிப் பிரிவுகள், தொழிலினால் ஏற்றத்தாழ்வு, வரியில் பாகுபாடு போன்றவை இருந்தது விளக்கப்பட்டிருக்கின்றது.

    பொருளாதார நிலை நன்கு இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றது பற்றி விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    எல்லாவற்றிற்கும் மேலாகப் பல்லவ மன்னர்கள் தமிழகத்திற்கு நிறைய கலைத் தொண்டு புரிந்தது பற்றிய செய்தி ஏராளமாக நமக்குக் கிடைக்கப்பெறுகிறது.

    பல்லவ மன்னர்கள் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டிராவிடிலும், இவர்கள் காலத்தில் நிறைய இலக்கியங்களும், இலக்கிய வகைகளும் தோன்றின. சைவ சமய நாயன்மார்கள், வைணவ சமய ஆழ்வார்கள் பக்தி இயக்கத்தை நடத்தியது பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:28:45(இந்திய நேரம்)