Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II
3. விருத்தம் என்பது பற்றி எழுதுக.
விருத்தம் என்பது நான்கு அடிகளைக் கொண்டது. முதல் அடியில் எத்தனை சீர்கள் வருமோ, அத்தனை சீர்களே மற்ற மூன்று அடிகளிலும் வரும். முதல் அடியின் ஓசையே மற்ற அடிகளிலும் திரும்பத் திரும்ப ஒலிக்கும். ஒரு அடிக்கு இத்தனை சீர்கள் வரவேண்டும்; இன்ன அளவில் சீர் அமைய வேண்டும் என்ற வரையறை இல்லை.