Primary tabs
5.6 தொகுப்புரை
தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய யுகத்தைப் பாரதி தோற்றுவித்த செய்திகள் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவர், முந்தைய புலவர்கள் பாடிய வடிவத்தையும் பாடு பொருளையும் மனத்தில் கொண்டு பாடியிருப்பது புலனாகிறது. பழைய வடிவங்களில் காலத்திற்கு ஏற்பப் புதுப் பாடு பொருள்களைக் கொண்டும் பாடல்கள் பாடியிருப்பது தெரிய வருகிறது. அவை நாடு, கொடி, சுதந்திரம் ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், சாதி சமய ஒழிப்பு, உலகியல் வாழ்வுக்கான அறிவுரை முதலியனவாகும். அவர் புதிதாகப் படைத்த யாப்பு வடிவங்களான வசன கவிதை, சுய சரிதை ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறும் முயற்சி இந்தப் பாடத்தில் மேற்கொள்ளப்பட்டது. பாரதியாரின் பாடல்களின் தாக்கத்தினால் தோன்றிய புலவர்களில் சிலரையும் இனம் காட்டுகிறது.