Primary tabs
-
1.5 தொகுப்புரை
நந்தம் தமிழ் மொழியின் இயல்பு; அது மூவகைப்படும்; இயற்றமிழில் இலக்கணம் அடங்கும்; இலக்கியங்களோடு இலக்கணம் வகுக்கப் பெற்றது; இலக்கணம் என்பதன் பொருள்; இலக்கணம் காலந்தோறும் வளர்ச்சியுற்று இந் நாளில் ஆறு வகைமையில் விரிந்து நிற்கின்றது; அகம்-புறம் என்பவற்றின் பொருள்; இவற்றுள் புறப்பொருள் தொல்காப்பியர் காலத்தில் ஏழாக வகைமையுற்று, அவர் காலத்திலேயே பன்னிரண்டு பகுதியாகவும் வளர்ச்சி கண்டது; அவ்வளர்ச்சியை ஏற்றுச் செய்யப்பட்ட வழிநூல் புறப்பொருள் வெண்பாமாலை; புறப்பொருள் வெண்பா மாலையின் நூற்பெயர்க் காரணம்; அதன் சிறப்பு; இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர், மரபு, சமயம், காலம் ஆகியவை; போர் நிகழ்வு; உலக இயற்கை; போர்க்கான காரணங்கள்;தமிழ் மன்னரிடத்து அறப்போர் நிலவியது; மன்னர்கள் போர்க்கு முன்னரும் போர்க் களத்திலும் கடைப்பிடித்த அறநெறிகள்; அவற்றுள் ஒன்றே ‘ஆநிரை கவர்தல்’ முதலியவை விரித்துக் கூறப்பட்டன. திணை-துறைகட்கு உரிய பொருள்கள்; போர் ஒழுகலாற்றின் படிநிலைகள்; ஆசிரியர் நூலை இயற்றிய திறம்; உரையாசிரியர் பெயர், பிறப்பிடம், காலம், உரைப்போக்கு முதலியவையும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.