Primary tabs
-
3.4 போரும் விளைவும்
ஆநிரையை மீட்பதற்காகப் போர் தொடங்குகிறது. போர் என்றாலே வெட்டும் குத்தும் மரணமும் ஏற்படுமல்லவா? அவற்றை விளக்குகின்றன பின்வரும் துறைகள்.
போர் - நிரை மீட்சிப் போர்; மலைதல் - போரிடல். பசுவினம் சென்ற அடிச்சுவட்டின் மேல் தொடர்ந்து சென்ற கரந்தையார் அவற்றை மீட்க வேண்டி மலைவது ஆதலின் போர் மலைதல் எனப் பெற்றது.
- கொளுவின் பொருளும் கொளுவும்
ஆரவாரத்தோடும் மின்னும் வேற்படைகளொடும் சென்ற கரந்தை மறவர்கள் வெட்சியாரைக் கண்டனர்; மேற்கொண்டு செல்லா வண்ணம் அவர்களைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டனர்; அச்சம் தோன்றும்படியாகத் தாக்கினர்; அதில் ஒரு சமயம் கரந்தையார் ஓங்கினர்; வெட்சியார் தாழ்ந்தனர், மற்றொரு சமயம் வெட்சியார் ஓங்கினர்; கரந்தையார் தாழ்ந்தனர். இவ்வாறு நிகழ்த்திய உறழ் போரைப் (மாறி மாறி வரும்) பற்றியது போர் மலைதல் என்னும் துறையாம்.
வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ
உட்குவரத் தாக்கி உறழ்செருப் புரிந்தன்று.(உட்கு = அச்சம்)
வேந்தனுடைய மனம் எப்போதும் வெற்றியையே நினைக்கும். வேந்தன் மனம் மகிழ ஆநிரையை மீட்கும் போரில் கரந்தை மறவன் புண்பட்டு வெற்றியுடன் வருவதனைக் கூறுவதால் புண்ணொடு வருதல் என்னும் பெயராயிற்று.
- கொளுவின் பொருளும் கொளுவும்
உலகம் உள்ளளவு தன்னுடைய புகழை நிலைக்கச் செய்து, மறவன் ஒருவன் கரந்தைப் போரில் தன்னுடல் அழிதற்குக் காரணமான விழுப்புண்ணை ஏற்று வெற்றியுடன் வந்தது புண்ணோடு வருதல் எனும் துறையாம்.
மண்ணோடு புகழ்நிறீஇப்
புண்ணொடு தான்வந்தன்றுபோர்க்களத்து + ஒழிதல் = போர்க்களத்தின்கண் இறந்து போதல். ஆநிரை மீட்சிப் போரில் ஈடுபட்ட கரந்தை மறவன் ஒருவன் போர்க்களத்தில் இறந்துபட்டதைக் கூறுவதால் இத்துறை, போர்க்களத்து ஒழிதல் என்னும் பெயர் உடையதாயிற்று.
- கொளுவின் பொருளும் கொளுவும்
வெட்சி மறவர்களோடு கரந்தை மறவன் ஒருவன் அயர்வின்றி இறுதி வரையும் எதிர்நின்று போரிட்டான்; அப்போர்க்களத்திலேயே இறந்து பட்டான். இறந்து பட்டமையை இயம்புவது போர்க்களத்து ஒழிதல் என்னும் துறையாம்.
படைக்குஓடா விறல்மறவரைக்
கடைக்கொண்டு களத்தொழிந்தன்று