Primary tabs
-
6.6 தொகுப்புரை
கவியரசு கண்ணதாசன் பல வரலாற்றுக், குறிப்புகளைக் கொண்டு, 1954-இல் திருச்சிச் சிறைச்சாலையில் படைத்த ஒரு குறுங்காவியம் மாங்கனி. பல தலை முறைகளுக்கு முன்னால் இருந்த மக்களின் உள்ளங்களில் பதிந்த வரலாற்று நிகழ்வுகளைக் கவிஞர் தம்முடைய படைப்புக்கு ஆதார மாக்கியுள்ளார். அந்த நிகழ்ச்சி காதலின் மாண்பினை விளக்கும் கதையாகிவிட்டதால் சிறந்து விளங்குகின்றது.
கவிதைகள் வெறும் பொழுது போக்கிற்காக அமையாமல் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தவே என்று மாங்கனி உணர்த்துகிறது. பழந்தமிழ்க் காவியங்களில் உள்ள கதாபாத்திரங்களை இன்றைய சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறு படைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன்.
தமிழ்மொழியின் மேன்மையைச் சொல்லல், அழகியல் உணர்வுகளின் வெளிப்பாடு, காதல், கற்பு இவற்றைப் பற்றிய உயர்வு. நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கு என மாங்கனி பல பரிமாணங்களைக் கொண்டதாகப் புனையப்பட்டுள்ளது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II