Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
1.மணிமேகலை - காப்பியப் பெயர்க்காரணம் தருக.
கோவலனின் குல தெய்வத்தின் பெயர் மணிமேகலை. எனவே, அதன் பெயரை தன் மகளுக்குச் சூட்டி மகிழ்கிறான் கோவலன். அவளே காப்பியத் தலைவி மணிமேகலை. இவள் பெயரே இக்காப்பியத் தலைப்பாக அமைகின்றது. மேகலை, மகளிர் இடையில் அணியும் ஓர் அணிகலன்; அது மணியால் செய்யப்பட்டதால் மணிமேகலை ஆயிற்று. சிலப்பதிகாரம் அணிகலனால் பெயர் பெற்றதைப் போல், இப்பெயரும் அணிகலன் பெயராக அமைந்தது ஓர் இனிய பொருத்தம் எனலாம்.