Primary tabs
4.1 உயிர்மெய்
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துத் தோன்றும். இதில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்துப் பின்னும் ஒலிக்கப்படும். பதினெட்டு மெய் எழுத்துகள், பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து, இருநூற்றுப் பதினாறு உயிர்மெய் எழுத்துகள் தோன்றும்.
மெய்-உயிர்=உயிர்மெய்18x12=216எடுத்துக்காட்டாக
க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.
க்+அ=கக்+ஆ=காக்+இ=கிக்+ஈ=கீக்+உ=குக்+ஊ=கூக்+எ=கெக்+ஏ=கேக்+ஐ=கைக்+ஒ=கொக்+ஓ=கோக்+ஒள=கௌஇவ்வாறே மற்ற மெய் எழுத்துகளும் 12 உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகள் தோன்றுவதை
உயிர் எழுத்துகளுக்கு உரிய மாத்திரையே உயிர்மெய் எழுத்துகளுக்கும் பொருந்தும். அதாவது உயிர்மெய்க் குறில் எழுத்துகள் ஒரு மாத்திரையும், உயிர்மெய் நெடில் எழுத்துகள் இரண்டு மாத்திரையும் பெறும். உயிர்மெய் எழுத்துகள் மெய் எழுத்துகளைப் போலவே வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று இனமாகவும் வரும்.
உயிர்மெய் எழுத்துகளின் ஒலிவடிவம் உயிர் எழுத்தின் ஓசையும் மெய் எழுத்தின் ஓசையும் கலந்ததாக இருக்கும். உயிர்மெய் எழுத்துகளை ஒலித்து, அதில் மெய்யின் ஓசையும் உயிர் எழுத்தின் ஓசையும் கலந்து இருப்பதை அறிக.
உயிர்மெய் எழுத்துகளில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்து பின்னும் வரும்.
க=க்+அமு=ம்+உஉயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் மெய் எழுத்துகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
எடுத்துக்காட்டு:
க் = க, கா, கி, கீ
ப் = பி, பு, பெ, பை
ட் = டி, டீ, டொ, டோஉயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவம் பின்வருமாறு அமையும்.
அகர உயிருடன் கூடிய மெய் எழுத்துகள், புள்ளி இல்லாத மெய் எழுத்தாக இருக்கும்.
க, ங, ச, ஞ, ட
மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது மேற்கண்ட வடிவத்தில் சில மாற்றங்கள் பெற்று வரும்.
ஆகார உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள், அகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகளுடன் வலதுபக்கம் கால் ‘ா’ பெற்று வரும்.
கா, சா, ஞா, டா
இகர உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள் மேலே ‘ி’குறியீடு பெற்று வரும்
பி, சி, தி, டி
ஈகார உயிருடன் சேர்ந்த மெய் எழுத்துகள் மேலே ‘ீ’குறியீடு பெற்று வரும்
நீ, ளீ, ரீ, தீ
உகரத்துடன் கூடிய மெய் எழுத்துகள் தனியான குறியீடு இல்லாமல் முழு உருவமும் மாறி வரும்.
கு, ஙு, சு. ஞு, டு, ணு, து, நு, பு,மு, யு, ரு, லு, வு, ழு, ளு, று, னு.
ஊகாரத்துடன் கூடிய மெய் எழுத்துகளும் தனிக் குறியீடு இல்லாமல் மாறி வரும்.
கூ, ஙூ, சூ, ஞூ, டூ, ணூ, தூ, நூ. பூ,மூ, யூ, ரூ, லூ, வூ, ழூ, ளூ, றூ, னூ.
எகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ஒற்றைக் கொம்பு என்னும் ‘ெ’ குறியீடு பெற்று வரும்.
கெ, செ, டெ, மெ
ஏகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் இரட்டைக் கொம்பு என்னும் ‘ே’ குறியீடு பெற்று வரும்.
கே, பே, ளே, வே, யே
ஐகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ை’என்ற குறியீட்டைப் பெற்று வரும்.
மை, லை, றை, ழை, னை
ஒகரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ெ’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ா’ என்ற குறியீடும் பெற்று வரும்.
பொ, யொ, ரொ, சொ
ஓகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ே’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ா’ என்ற குறியீடும் பெற்று வரும்.
கோ, டோ, மோ, யோ, ழோ
ஒளகாரத்துடன் சேர்ந்த மெய் எழுத்துகள் இடதுபக்கம் ‘ெ’என்ற குறியீடும், வலதுபக்கம் ‘ள’ என்ற குறியீடும் பெற்று வரும்.
பௌ, சௌ, நௌ, ரௌ
புள்ளி விட்டு அவ்வொடு முன் உரு ஆகியும்
ஏனை உயிரொடு உருவு திரிந்தும்
உயிர் அளபாய் அதன் வடிவு ஒழித்து இருவயின்
பெயரொடும் ஒற்று முன்னாய் வரும் உயிர் மெய்(நன்னூல் 89)
(பொருள்: அகர உயிர் எழுத்துடன் சேர்ந்து வரும்போது புள்ளி இல்லாமலும் மற்ற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து வரும்போது வடிவம் திரிந்தும் வரும். மாத்திரை கொள்ளும்போது உயிர்எழுத்தின் மாத்திரையே கொண்டு வரும். மெய் எழுத்து முன்பும் உயிர் எழுத்து பின்பும் வந்து உயிர் மெய் என்று இரண்டின் பெயரையும் பெற்று வரும்.)