Primary tabs
-
1.0 பாட முன்னுரை
தமிழக வரலாற்றில் நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குச் சிறப்பான இடம் உண்டு. மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய இடங்களில் நாயக்கர்களின் ஆட்சி அமைந்தது. சமயப்பற்றும், கலையார்வமும் கொண்ட நாயக்க மன்னர்கள் கோயில் கட்டுவதிலும், அரச மாளிகைகள் அமைப்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தனர். சமயப் பிணக்குகளையும், சாதிப் பிரிவினைகளையும் கட்டுக்குள் வைத்திருந்தனர். தெலுங்கு மொழி அரசவையிலும் இசையிலும் சிறப்பிடம் பெற்றிருந்த போதும், இவர்கள் காலத்தில் தமிழில் சிற்றிலக்கியங்கள் பெருகின. இனி இவர்கள் காலத்திய ஆட்சி முறை, கலை வளர்ச்சி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை இப்பாடத்தில் காண்க.