Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் தண்டியலங்காரத்தின் பொதுவணியியலை அறிமுகம் செய்கிறது. செய்யுள் வகைகளை எடுத்துரைக்கிறது. தொகைநூல்கள் அமையும் முறையைப் பற்றி விளக்குகிறது. தொடர் நிலைச் செய்யுள் குறித்து விவரிக்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பொதுவணியியலின் அவசியத்தைத் தெரிந்து கொள்ளலாம்.தனிப்பாடல்களின் அமைப்பு முறை குறித்து அறிந்து கொள்ளலாம்.நூல்கள் தொகுக்கப்படும் முறையை உணர்ந்து கொள்ளலாம்.அந்தாதி, கலம்பகம் போன்றவற்றின் பாடல் தொடர்பினைப் புரிந்து கொள்ளலாம்.பொருள் தொடர்நிலைச் செய்யுள்கள் பற்றிய கருத்துகளை அறியலாம்.