Primary tabs
-
பாடம் - 5
D04115
இக்கால எழுத்துத்தமிழ்இக்கால எழுத்துத்தமிழ் என்ற இந்தப் பாடம் பழந்தமிழிலிருந்து இக்கால எழுத்துத்தமிழ் எவ்வாறான வகைகளில் மாறுபட்டு, வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது என்பது பற்றி விளக்குகிறது.அதோடு மட்டுமல்லாமல் இக்கால எழுத்துத்தமிழ் இன்று பெருமளவு மாற்றம் அடைந்து விசுவரூபம் எடுத்துத் திகழ்கிறது என்பதை விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இப்பாடத்தின் கீழ் பழந்தமிழ் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டது என்பது பற்றியும், இக்காலத் தமிழ் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது என்பது பற்றியும் அறியலாம்.- மொழியியல் நோக்கில் இக்கால எழுத்துத்தமிழைப் படிப்பதால் சில வகையான இலக்கணக் கூறுகள் அதில் அடங்கியுள்ளன என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
- பேச்சுத்தமிழ், தமிழ்மொழியின் ஒரு அங்கமாகப் பழங்காலத்திலிருந்து இருந்து வந்தது என்பதும், இக்கால எழுத்துத்தமிழில் அது நடைமுறையில் வரலாயிற்று என்ற செய்தியும் நமக்குக் கிடைக்கின்றன.
- ஆங்கில மொழியைப்போல் இக்கால எழுத்துத்தமிழ் பல இலக்கணக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.