Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
1.கலை, கலைக்காகவே எனும் வாதம், நம்முன் வைக்கும் பிரச்சனைகள் என்ன?
கலையின் இலக்குப் பற்றியது : கலை அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யப்படுவதேயல்லாமல் அதற்கு என்று செயல்பாடு கூறுவது சரியாகுமா? வாசகர் எதிர்பார்ப்பு : வாசகர் அல்லது பார்வையாளர், என்ன எதிர்பார்த்துக் குறிப்பிட்ட கலை, இலக்கியத்தின் பக்கம் போகிறார்? அவருக்குக் கிடைப்பது என்ன? நோக்கு : கலை அல்லது கலைஞனின் நோக்கு என்று ஒன்று உண்டா? அப்படியானால் அது என்ன?