Primary tabs
- 6.6 தொகுப்புரை
இனிய நண்பர்களே, இதுவரை தமிழின் குறும்பா என்னும் கவிதை வகை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்று நினைவு படுத்திப் பாருங்கள் :- குறும்பா என்பது என்ன என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
- குறும்பா என்னும் புதுவகைத் தமிழ்க் கவிதை தோன்றி வளர்ந்த வரலாற்றை அறிய முடிந்தது.
- குறும்பாக்களைச் சிறப்பாகப் படைத்த மஹாகவி, மீரா, ஈரோடு தமிழன்பன் ஆகிய கவிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
- அவர்களின் படைப்பு ஆக்கத் திறன்கள் பற்றியும், அவர்களின் தனித்தன்மை பற்றியும் அவர்களின் குறும்பாக்கள் சில கொண்டு புரிந்து கொள்ள முடிந்தது.
- நல்ல குறும்பாக்களைச் சுவைத்து மகிழ முடிந்தது.
தன்மதிப்பீடு : வினாக்கள் - II