Primary tabs
-
3.1 முதல் ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். காலத்தால் முந்தியவர்கள் என்பதால் "முதல் மூவர்" என்று அழைக்கப்பட்டனர்.
• பொய்கை ஆழ்வார்
• பூதத்தாழ்வார்
• பேயாழ்வார்
ஆழ்வார்களில், காலத்தால் முன்னே தோன்றிய பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூன்று ஆழ்வார்களும் முதல் ஆழ்வார்கள் என்னும் பெருமைக்குரியவர்கள். இவர்களின் பாசுரங்கள், பாமரர் முதல் பாராண்ட மன்னர் வரை பண்டைத் தமிழகம் முழுவதும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின; கோயில்கள் பெருகின; பக்தி, இயக்கமாக மாறத் தொடங்கி எங்கும் பரவ வித்திட்டன.