தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manimegalai


1 விழா அறை காதை
[ விழாஅறைந்த பாட்டு ]

உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப்

பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய

ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்

தூங்குஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்

5

விண்ணவர் தலைவனை வணங்கிமுன் நின்று

மண்ணகத்து என்தன் வான்பதி தன்னுள்

மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த

நால்ஏழ் நாளினும் நன்குஇனிது உறைகென

அமரர் தலைவன் ஆங்குஅது நேர்ந்தது

10

கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்,

மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடுஎனும்,

இத்திறம் தத்தம் இயல்பினில் காட்டும்,

சமயக் கணக்கரும் தம்துறை போகிய

அமயக் கணக்கரும் அகலார் ஆகிக

15

கரந்துஉரு எய்திய கடவு ளாளரும்,

பரந்துஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும

ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமும்

வந்துஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்

கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்,

20

விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்

மடித்த செவ்வாய் வல்எயிறு இலங்க

இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்

தொடுத்தபா சத்துத் தொல்பதி நரகரைப்

புடைத்துஉணும் பூதமும் பொருந்தா தாயிடும்

25

மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும்

ஆயிரம் கண்ணோன் விழாக்கால் கொள்கென,

வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்

கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி

ஏற்றுஉரி போர்த்த இடியுறு முழக்கின்

30

கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை

முரசுகடிப் பிடூஉம் முதுக்குடிப் பிறந்தோன்

திருவிழை மூதூர் வாழ்கென்று ஏத்தி

வானமும் மாரி பொழிக மன்னவன்

கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக

35

தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்

ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குஉள

நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்

பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து

மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்

40

இந்நகர் போல்வதுஓர் இயல்பினது ஆகிப்

பொன்னகர் வறிதாப் போதுவர் என்பது

தொல்நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்,

தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்

பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்

45

பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்

காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்

பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து

முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின

50

விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்

பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்

கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும்

மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்

நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்

55

பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம்ஈ றாக

வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை

ஆறுஅறி மரபின் அறிந்தோர் செய்யுமின்

தண்மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்

புண்ணிய நல்உரை அறிவீர் பொருந்துமின்

60

ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்

பட்டிமண் டபத்துப் பாங்குஅறிந்து ஏறுமின்

பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்

செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்

வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்

65

தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்

தேவரும் மக்களும் ஒத்துஉடன் திரிதரும்

நால்ஏழ் நாளினும் நன்குஅறிந் தீர்என்

ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும்

களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பிப்

70

பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி

அணிவிழா அறைந்தனன் அகநகர் மங்குஎன்.

விழாவறை காதை முற்றிற்று.

விழா அறை காதை முற்றிற்று.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:28:02(இந்திய நேரம்)