தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manimeagalai


19 சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய

 
காதை
 
 

[ மணிமேகலை காயசண்டிகை வடிவாய்ச் சிறைக்கோட்டம்புக்குச்  சிறைவீடு செய்து சிறைக்  கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய பாட்டு ]

 
முதியாள் திருந்து அடி மும்மையின் வணங்கி
மதுமலர்த் தாரோன் வஞ்சினம் கூற
ஏடுஅவிழ் தாரோய் எம்கோ மகள்முன
நாடாது துணிந்துநா நல்கூர்ந் தனையென
5
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்,
உதய குமரன் உள்ளம் கலங்கிப்
பொதியறைப் பட்டோர் போன்றுமெய் வருந்தி
அங்குஅவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே
10
செங்கோல் காட்டிய தெய்வமும் திப்பியம்
பைஅரவு அல்குல் பலர்பசி களையக்
கையில் ஏந்திய பாத்திரம் திப்பியம்
முத்தை முதல்வி அடிபிழைத் தாய்எனச
சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்
15
இந்நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின்
பின்அறி வாம்எனப் பெயர்வோன் தன்னை
அகல்வாய் ஞாலம் ஆர்இருள் உண்ணப்
பகல்அரசு ஓட்டிப் பணைஎழுந்து ஆர்ப்ப
மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு
20
நீல யானை மேலோர் இன்றிக்
காமர் செங்கை நீட்டி வண்டுபடு
பூநாறு கடாஅம் செருக்கிக் கால்கிளர்ந்து
நிறைஅழி தோற்றமொடு தொடர முறைமையின்
நகர நம்பியர் வளையோர் தம்முடன்
25
மகர வீணையின் கிளைநரம்பு வடித்த
இளிபுணர் இன்சீர் எஃகுஉளம் கிழிப்பப்
பொறாஅ நெஞ்சில் புகைஎரி பொத்திப்
பறாஅக் குருகின் உயிர்த்துஅவன் போயபின்,
உறையுள் குடிகை உள்வரிக் கொண்ட
30
மறுஇல் செய்கை மணிமே கலைதான்
மாதவி மகளாய் மன்றம் திரிதரின்
காவலன் மகனோ கைவிட லீயான்
காய்பசி யாட்டி காயசண் டிகைஎன
ஊர்முழுது அறியும் உருவம் கொண்டே
35
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி
ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன்அவர்
மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே
நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தன ராம்என
முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த
40
அமுத சுரபியை அங்கையின் வாங்கிப்
பதிஅகம் திரிதரும் பைந்தொடி நங்கை
அதிர்கழல் வேந்தன் அடிபிழைத் தாரை
ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக் கோட்டம்
விருப்பொடும் புகுந்து வெய்துஉயிர்த்துப் புலம்பி
45
ஆங்குப் பசிஉறும் ஆர்உயிர் மாக்களை
 
வாங்கு கையகம் வருந்தநின்று ஊட்டலும்,
ஊட்டிய பாத்திரம் ஒன்றுஎன வியந்து
கோட்டம் காவலர் கோமகன் தனக்குஇப்
பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும்
50
யாப்புடைத் தாக இசைத்தும்என்று ஏகி,
நெடியோன் குறள்உரு வாகி நிமிர்ந்துதன
அடியின் படியை அடக்கிய அந்நாள்
நீரின் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர்கெழு திருமகள்
55
சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு
போதுஅவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக்
கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப்
பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய
வரிக்குயில் பாட மாமயில் ஆடும்
60
விரைப்பூம் பந்தர் கண்டுஉளம் சிறந்தும்,
புணர்துணை நீங்கிய பொய்கை அன்னமொடு
மடமயில் பேடையும் தோகையும் கூடி
இருசிறை விரித்துஆங்கு எழுந்துடன் கொட்பன
ஒருசிறைக் கண்டுஆங்கு உள்மகிழ்வு எய்தி
65
மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவைஇஃது ஆம்என நோக்கியும்,
கோங்குஅலர் சேர்ந்த மாங்கனி தன்னைப்
பாங்குஉற இருந்த பல்பொறி மஞ்ஞையைச
செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்திப்
70
பைங்கிளி ஊட்டும்ஓர் பாவையாம் என்றும்,
அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த
பிணவுக்குரங்கு ஏற்றிப் பெருமதர் மழைக்கண்
மடவோர்க்கு இயற்றிய மாமணி ஊசல்
கடுவன் ஊக் குவது கண்டுநகை எய்தியும்,
75
பாசிலை செறிந்த பசுங்கால் கழையொடு
வால்வீச் செறிந்த மராஅம் கண்டு
நெடியோன் முன்னொடு நின்றன னாம்எனத்
தொடிசேர் செங்கையில் தொழுதுநின்று ஏத்தியும
ஆடல் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்
80
நாடகக் காப்பிய நல்நூல் நுனிப்போர்
பண்ணியாழ் நரம்பில் பண்ணுமுறை நிறுப்போர்
தண்ணுமைக் கருவிக் கண்எறி தெரிவோர்
குழலொடு கண்டம் கொளச்சீர் நிறுப்போர்
பழுநிய பாடல் பலரொடு மகிழ்வோர்
85
ஆரம் பரிந்த முத்தம் கோப்போர்
ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர்
குங்கும வருணம் கொங்கையின் இழைப்போர்
அஞ்செங் கழுநீர் ஆய்இதழ் பிணிப்போர்
நல்நெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர்
90
பொன்னின் ஆடியின் பொருந்துபு நிற்போர்
ஆங்குஅவர் தம்மோடு அகல்இரு வானத்து
வேந்தனிற் சென்று விளையாட்டு அயர்ந்து,
குருந்தும் தளவும் திருந்துமலர்ச் செருந்தியும்
முருகுவிரி முல்லையும் கருவிளம் பொங்கரும்
95
பொருந்துபு நின்று திருந்துநகை செய்து
குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும்
பிறழ்ந்துபாய் மானும் இறும்புஅகலா வெறியும்
வம்மெனக் கூஉய் மகிழ்துணை யொடுதன்
செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்று
100
மன்னவன் தானும் மலர்க்கணை மைந்தனும்
இன்இள வேனிலும் இளங்கால் செல்வனும்
எந்திரக் கிணறும் இடுங்கல் குன்றமும்
வந்துவீழ் அருவியும் மலர்ப்பூம் பந்தரும்
பரப்புநீர்ப் பொய்கையும் கரப்புநீர்க் கேணியும்
105
ஒளித்துறை இடங்களும் பளிக்குஅறைப் பள்ளியும்
யாங்கணும் திரிந்து தாழ்ந்துவிளை யாடி,
மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்
110
கொண்டுஇனிது இயற்றிய கண்கவர் செய்வினைப்
பவளத் திரள்கால் பன்மணிப் போதிகைத்
தவள நித்திலத் தாமம் தாழ்ந்த
கோணச் சந்தி மாண்வினை விதானத்துத்
தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பின்
115
பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபத்து
இந்திர திருவன் சென்றுஇனிது ஏறலும்,
வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால்
சேய்நிலத்து அன்றியும் செவ்விதின் வணங்கி
எஞ்சா மண்நசைஇ இகல்உளம் துரப்ப
120
வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி
முறம்செவி யானையும் தேரும் மாவும
மறம்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த
தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர
சிலைக்கயல் நெடுங்கொடி செருவேல் தடக்கை
125
ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால்
காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை
வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி
ஒளியொடு வாழி ஊழிதோறு ஊழி
வாழி எம்கோ மன்னவர் பெருந்தகை
130
கேள்இது மன்னோ கெடுகநின் பகைஞர்
யானைத் தீநோய்க்கு அயர்ந்துமெய் வாடிஇம்
மாநகர்த் திரியும்ஓர் வம்ப மாதர்
அருஞ்சிறைக் கோட்டத்து அகவயின் புகுந்து
பெரும்பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி
135
ஐயப் பாத்திரம் ஒன்றுகொண்டு ஆங்கு
மொய்கொள் மாக்கள் மொசிக்கஊண் சுரந்தனள்
ஊழிதோறு ஊழி உலகம் காத்து
வாழி எம்கோ மன்னவ என்றலும்,
வருக வருக மடக்கொடி தான்என்று
140
அருள்புரி நெஞ்சமொடு அரசன் கூறலின்
வாயி லாளரின் மடக்கொடி தான்சென்று
ஆய்கழல் வேந்தன் அருள்வா ழியஎனத்
தாங்குஅருந் தன்மைத் தவத்தோய் நீயார்
யாங்கா கியதுஇவ் ஏந்திய கடிஞைஎன்று
145
அரசன் கூறலும், ஆயிழை யுரைக்கும்
விரைத்தார் வேந்தே நீநீடு வாழி
விஞ்சை மகள்யான் விழவுஅணி மூதூர
வஞ்சம் திரிந்தேன் வாழிய பெருந்தகை
வானம் வாய்க்க மண்வளம் பெருகுக
150
தீதுஇன் றாக கோமகற்கு ஈங்குஈது
ஐயக் கடிஞை அம்பலம் மருங்குஓர்
தெய்வம் தந்தது திப்பிய மாயது
யானைத் தீநோய் அரும்பசி கெடுத்தது
ஊன்உடை மாக்கட்கு உயிர்மருந்து இதுஎன,
155
யான்செயற் பாலதுஎன் இளங்கொடிக்கு என்று
வேந்தன் கூற மெல்இயல் உரைக்கும்
சிறையோர் கோட்டம் சீத்துஅருள் நெஞ்சத்து
அறவோர்க்கு ஆக்கும் அதுவா ழியர்என,
அருஞ்சிறை விட்டுஆங்கு ஆயிழை உரைத்த
160
பெருந்தவர் தம்மால் பெரும்பொருள் எய்தக்
கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம்
அறவோர்க்கு ஆக்கினன் அரசுஆள் வேந்துஎன்.
 

சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை
முற்றிற்று.
 

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:30:40(இந்திய நேரம்)