முகப்பு |
கபிலர் |
1. குறிஞ்சி |
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்; |
||
என்றும் என் தோள் பிரிபு அறியலரே' |
||
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச் |
||
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல, |
||
5 |
புரைய மன்ற, புரையோர் கேண்மை; |
|
நீர் இன்று அமையா உலகம் போலத் |
||
தம் இன்று அமையா நம் நயந்தருளி, |
||
நறு நுதல் பசத்தல் அஞ்சிச் |
||
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! | உரை | |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.-கபிலர்
|
13. குறிஞ்சி |
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய |
||
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!- |
||
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த |
||
பகழி அன்ன சேயரி மழைக் கண், |
||
5 |
நல்ல பெருந் தோளோயே! கொல்லன் |
|
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் |
||
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி |
||
மயில் அறிபு அறியாமன்னோ; |
||
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே. | உரை | |
இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்
|
32. குறிஞ்சி |
'மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன், |
||
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி |
||
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும் |
||
வருந்தினன்' என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்; |
||
5 |
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, |
|
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு |
||
அரிய-வாழி, தோழி!-பெரியோர் |
||
நாடி நட்பின் அல்லது, |
||
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே. | உரை | |
தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது.- கபிலர்
|
59. முல்லை |
உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து, |
||
நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி, |
||
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல |
||
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து, |
||
5 |
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் |
|
வன் புலக் காட்டு நாட்டதுவே-அன்பு கலந்து |
||
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து |
||
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை |
||
நுண் முகை அவிழ்ந்த புறவின் |
||
10 |
பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. | உரை |
வினைமுற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.- கபிலர்
|
65. குறிஞ்சி |
அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!- |
||
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக் |
||
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ, |
||
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து, |
||
5 |
புலியொடு பொருத புண் கூர் யானை |
|
நற் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
||
விற் சுழிப்பட்ட நாமப் பூசல் |
||
உருமிடைக் கடி இடி கரையும் |
||
பெரு மலை நாடனை 'வரூஉம்' என்றோளே. | உரை | |
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைமகட்குச் சொல்லியது.-கபிலர்
|
77. குறிஞ்சி |
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன் |
||
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர் |
||
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு |
||
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச் |
||
5 |
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் |
|
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல் |
||
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் |
||
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன் |
||
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை |
||
10 |
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், |
|
திதலை அல்குல், குறுமகள் |
||
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே. | உரை | |
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்
|
217. குறிஞ்சி |
இசை பட வாழ்பவர் செல்வம் போலக் |
||
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம், |
||
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது |
||
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி, |
||
5 |
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் |
|
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து |
||
ஊடல் உறுவேன்-தோழி!-நீடு |
||
புலம்பு சேண் அகல நீக்கி, |
||
புலவி உணர்த்தல் வன்மையானே. | உரை | |
தலைமகள் வாயில் மறுத்தது.-கபிலர்.
|
222. குறிஞ்சி |
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை |
||
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் |
||
கை புனை சிறு நெறி வாங்கி, பையென, |
||
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று, |
||
5 |
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் |
|
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன் |
||
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில், |
||
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது, |
||
பெருங் களிறு பிளிறும் சோலை அவர் |
||
10 |
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? | உரை |
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
225. குறிஞ்சி |
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப் |
||
பொருத யானை வெண் கோடு கடுப்ப, |
||
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை, |
||
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன |
||
5 |
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை |
|
இரந்தோர் உளர்கொல்-தோழி!-திருந்து இழைத் |
||
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப் |
||
பயந்து எழு பருவரல் தீர, |
||
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே? | உரை | |
வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-கபிலர்
|
253. குறிஞ்சி |
புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும், |
||
பள்ளி யானையின் வெய்ய உயிரினை, |
||
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து |
||
எனவ கேளாய், நினையினை, நீ நனி: |
||
5 |
உள்ளினும் பனிக்கும்-ஒள் இழைக் குறுமகள், |
|
பேர் இசை உருமொடு மாரி முற்றிய, |
||
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி, |
||
பலவு உறு குன்றம் போல, |
||
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே. | உரை | |
செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
267. நெய்தல் |
'நொச்சி மா அரும்பு அன்ன கண்ண |
||
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி, |
||
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் |
||
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல் |
||
5 |
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்- |
|
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல், |
||
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து' என, |
||
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய; |
||
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப, |
||
10 |
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல், |
|
'இவை மகன்' என்னா அளவை, |
||
வய மான் தோன்றல் வந்து நின்றனனே. | உரை | |
தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;வரைவு கடாயதூஉம் ஆம்.-கபிலர்
|
291. நெய்தல் |
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் |
||
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு |
||
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர் |
||
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும், |
||
5 |
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும், |
|
கண்டாங்கு உரையாய்; கொண்மோ-பாண!- |
||
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து, |
||
எல்லித் தரீஇய இன நிரைப் |
||
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே? | உரை | |
வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, நெருங்கிச் சொல்லி யது.- கபிலர்
|
309. குறிஞ்சி |
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும், |
||
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி, |
||
'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின் |
||
ஆழல்; வாழி!-தோழி!-'வாழைக் |
||
5 |
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும், |
|
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே |
||
விழுமமாக அறியுநர் இன்று' என, |
||
கூறுவைமன்னோ, நீயே; |
||
தேறுவன்மன் யான், அவருடை நட்பே. |
உரை |
|
'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.-கபிலர்
|
320. மருதம் |
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று; |
||
எவன் குறித்தனள்கொல்?' என்றி ஆயின்- |
||
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின், |
||
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல் |
||
5 |
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், |
|
காரி புக்க நேரார் புலம்போல், |
||
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு, |
||
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி |
||
எழில் மா மேனி மகளிர் |
||
10 |
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. | உரை |
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது.-கபிலர்
|
336. குறிஞ்சி |
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு |
||
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின், |
||
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன், |
||
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை, |
||
5 |
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி, |
|
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட! |
||
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் |
||
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்-அரவின் |
||
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி, |
||
10 |
இரை தேர் எண்கினம் அகழும் |
|
வரை சேர் சிறு நெறி வாராதீமே! | உரை | |
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது.-கபிலர்
|
353. குறிஞ்சி |
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த |
||
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள, |
||
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை, |
||
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
||
5 |
கல் கெழு குறவர் காதல் மடமகள் |
|
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும், |
||
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை-எம் |
||
காமம் கனிவதுஆயினும், யாமத்து |
||
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை |
||
10 |
வெஞ் சின உருமின் உரறும் |
|
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே. | உரை | |
தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.- கபிலர்
|
359. குறிஞ்சி |
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா |
||
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக, |
||
கன்று தாய் மருளும் குன்ற நாடன் |
||
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது |
||
5 |
உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின், |
|
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை |
||
வாடலகொல்லோ தாமே-அவன் மலைப் |
||
போருடை வருடையும் பாயா, |
||
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே? | உரை | |
தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகன் குறிப்பின் ஓடியது-கபிலர்
|
361. முல்லை |
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி |
||
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்; |
||
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா, |
||
படு மழை பொழிந்த தண் நறும் புறவில், |
||
5 |
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப, |
|
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த் |
||
தந்தன நெடுந்தகை தேரே; என்றும் |
||
அரும் படர் அகல நீக்கி, |
||
விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே. | உரை | |
வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.-மதுரைப் பேராலவாயர்
|
373. குறிஞ்சி |
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ, |
||
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை |
||
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி, |
||
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு |
||
5 |
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி, |
|
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப் |
||
பா அமை இதணம் ஏறி, பாசினம் |
||
வணர் குரற் சிறு தினை கடிய, |
||
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே? | உரை | |
செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
376. குறிஞ்சி |
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ |
||
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை, |
||
வரையோன் வண்மை போல, பல உடன் |
||
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! |
||
5 |
குல்லை, குளவி, கூதளம், குவளை, |
|
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன், |
||
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் |
||
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய |
||
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை |
||
10 |
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி, |
|
வறும் புனம் காவல் விடாமை |
||
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே? | உரை | |
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|