Primary tabs
1.6 தொகுப்புரை
இப்பாடத்தின் மூலம் பழந்தமிழகத்தின் இயற்கை அமைப்பினைப் பற்றி அறிந்திருப்பீர்கள்.
சங்ககாலத்திற்கு முற்பட்ட தமிழகத்தின் நிலப்பரப்பு எவ்வாறு இருந்தது, அது சங்ககாலத்தில் எவ்வாறு இருந்தது என்றும், பிற்காலத்தில் தமிழகத்தின் இயற்கை அமைப்பு எவ்வாறெல்லாம் மாற்றம் அடைந்தது என்றும் விளங்கிக் கொண்டிருப்பீர்கள்.
பழங்காலத் தமிழகத்தில் என்னென்ன ஆறுகள் பெருகி ஓடின என்றும், இன்று அவ்வாறுகளின் நிலை என்ன என்றும் படித்து உணர்ந்திருப்பீர்கள். என்னென்ன மலைகள் பழந்தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன என்பது பற்றி அறிந்து கொண்டீர்கள். அன்று வாழ்ந்த மக்கள் திணை நில அடிப்படையிலான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டீர்கள். அந்தந்த நில அமைப்புகளுக்கேற்ப அவர்கள் வேளாண்மை, தச்சுவேலை, வேட்டையாடுதல், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி தொழில், முத்துக்குளித்தல், உப்பு வாணிபம் போன்ற தொழில்களைக் கொண்டிருந்தனர் எனவும் நன்கு அறிந்திருப்பீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II