தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.6 தொகுப்புரை  
     

    மாணவர்களே! பாரதிதாசன் கனவு கண்ட சமுதாயத்தைப் பற்றி இதுவரை விரிவாகப் பார்த்தோம். அச்சமுதாயம்,
     

    • சாதி மதங்களற்றது

    • வருணப் பாகுபாடற்றது

    • சமத்துவத் தன்மை உடையது

    • மூடப்பழக்கங்கள் இல்லாதது

    • சுயமரியாதை மிக்கது

    • உழைப்பவர்க்கு மதிப்பளிப்பது

    • எல்லோரும் கற்றவர்களாகத் துலங்குவது

    இந்தச் சமுதாயம் இன்றும் முழுமையாக உருவாகிவிடவில்லை. அதனை நோக்கிய பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘தடைக்கற்கள் உண்டு என்றாலும் தடந்தோள் உண்டு’ எனப் பாரதிதாசன் கூறுவதுபோல் மன உறுதியோடு அதனை அடைய முயலவேண்டும்.

    (448kb)

    தன்மதிப்பீடு: வினாக்கள் - II

     

    1. பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப் பெற்றவர் யார்?
    1. அகமணமுறை என்பதன் பொருள் யாது?
    1. புரட்சித் திருமணத்தின் ஏழு கூறுகள் யாவை?
    1. கல்வியில்லாத சமுதாயம் எது போன்றது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:48:09(இந்திய நேரம்)