Primary tabs
-
2.6 தொகுப்புரை
மாணவர்களே! பாரதிதாசன் கனவு கண்ட சமுதாயத்தைப் பற்றி இதுவரை விரிவாகப் பார்த்தோம். அச்சமுதாயம்,
-
சாதி மதங்களற்றது
-
வருணப் பாகுபாடற்றது
-
சமத்துவத் தன்மை உடையது
-
மூடப்பழக்கங்கள் இல்லாதது
-
சுயமரியாதை மிக்கது
-
உழைப்பவர்க்கு மதிப்பளிப்பது
-
எல்லோரும் கற்றவர்களாகத் துலங்குவது
இந்தச் சமுதாயம் இன்றும் முழுமையாக உருவாகிவிடவில்லை. அதனை நோக்கிய பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘தடைக்கற்கள் உண்டு என்றாலும் தடந்தோள் உண்டு’ எனப் பாரதிதாசன் கூறுவதுபோல் மன உறுதியோடு அதனை அடைய முயலவேண்டும்.
-