Primary tabs
-
6.9 தொகுப்புரை
சிற்றிலக்கிய வகைமை வளர்ச்சியடைந்து கிளை பரப்பி, புதிய முறையில் மாற்றம் பெற்ற நிலை குறித்து இப்பாடம் விளக்கியது.அகப்பாட்டு
ச் சார்ந்தும் புறப்பாட்டுச் சார்ந்தும் பக்தி சார்ந்தும் நாட்டுப்புறப் பாட்டுச் சார்ந்தும் கிளைவிட்ட சிற்றிலக்கியங்கள் பற்றி விளக்கம் தரும் வகையில் இப்பாடம் அமைந்தது.சிற்றிலக்கியங்களுள் புகழ் மிக்கனவாகத் திகழும் ஆற்றுப்படை, அந்தாதி, பிள்ளைத்தமிழ், பரணி, கலம்பகம், பள்ளு, உலா, குறவஞ்சி, மடல் எனும் ஒன்பது வகைமைகளை இப்பாடம் விளக்கமாக உணர்த்தியது.


