Primary tabs
-
6.1 சிற்றிலக்கிய வகைமை
சிற்றிலக்கியத் தோற்றம் நான்கு வழிகளில் அமைகிறது என, டாக்டர் தமிழண்ணல் குறிப்பிடுகிறார்.
(1)அகப்பாட்டினைச் சார்ந்து அமைவன(2)புறப்பாட்டினைச் சார்ந்து அமைவன(3)பத்திமையடிப்படையில் அமைவன (பக்தி அடிப்படை)(4)நாட்டுப்புறப் பாடல் அடிப்படையில் கிளைப்பன“அகத்திணை,துறை ஆகியவற்றைச் சார்ந்தெழுந்தவை பல. கோவை, மடல், கைக்கிளை, தூது என்றாற் போல்வன.
புறத்திணை, துறை சார்ந்தனவும் பல. காஞ்சி, மாலை, கையறுநிலை, ஆற்றுப்படை, திருப்பள்ளியெழுச்சி என்றாற் போல்வன.
பத்திமையடிப்படையில் அந்தாதிகளாகவும், மாலைகளாகவும் கிளைத்த பாசுரங்கள் மிகப் பலவாகும்
கும்மி, பள்ளு, சிந்து என்றாற் போல்வன நாட்டுப்புறப் பாடலடிப்படையில் என்று
கிளைத்தன.”என்று, சிற்றிலக்கியம் வகைமையாய் வளர்ந்த சூழ்நிலையைக் காட்டுகிறார் தமிழண்ணல்.
பத்துப் பத்தாகப்
பாடும் மரபு பதிற்றுப்பத்திலும் ஜங்குறுநூற்றிலும் காணப்படுகிறது பதிக வகையில் பத்துப் பத்துப் பாடலாகப் பாடும் மரபு தேவார மரபாகும். இதனைப் பதிகம் என்று நாம் அழைக்கிறோம். இம் மரபு வளர்ச்சியடைந்து பத்துப் பத்துப் பாடலாகப் புனையும் மரபு தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் வந்தது.சான்றாக :
பத்து, பதிகம், ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, தசாங்கம் போன்றன.