Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
உமறுப் புலவரின் குறிஞ்சி நில வருணனையின் சிறப்பு யாது?
குறிஞ்சி நிலத்தில் தினைப் பயிர்கள் இருந்தன. தினையின் இலைகள் நீண்டவை. அவை கனமான கதிர்களால் வளைந்தன. குறத்தியர் கதிர்களை உண்ணவரும் கிளிகளை விரட்டினர். கல்லால் எறிந்தனர்; பாடி விரட்டினர். கிளிகளும் கீச் என ஒலி எழுப்பின. இந்த இரு ஓசைகளையும் பாடலாக எண்ணிக் காட்டுப் பசுக்கள் உறங்கின.