Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் : II
5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அக, புற மரபுகள் கையாளப்பட்ட விதத்தை விவரிக்க?
தமிழ் இலக்கிய வரலாற்றைக் கூர்ந்து நோக்கும்போது ஓர் உண்மை புலனாகும். சங்க அக இலக்கிய மரபும் புற இலக்கிய மரபும் காலம் தோறும் தமிழிலக்கியங்கள் மீது செல்வாக்குச் செலுத்தி இருப்பதை அறியமுடியும். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும் அச்செல்வாக்கு உண்டு.