Primary tabs
-
5.5 தொகுப்புரை
தொல்காப்பியர் காலத்தில் கைக்கிளை அகத்திணையாக இருந்து பின்னர்ப் புறத்திணையாக மாறியது. புறப்பொருள் வெண்பா மாலை ஆண்பால் கைக்கிளை, பெண்பால் கைக்கிளை என இரு பிரிவாகப் பகுத்து இத்திணையை விளக்குகிறது. ஆண்பால் கைக்கிளையில் ஒருதலையாகக் காதல் கொண்ட ஆணின் உணர்வுகள் பேசப்படுகின்றன. பெண்பால் கைக்கிளையில் ஒருதலையாகக் காதல் கொண்ட பெண்ணின் உணர்வுகள் பேசப்படுகின்றன. மரபில் ஏற்பட்ட மாற்றத்தையும் புறத்திணைகள் வளர்ந்ததன் காரணத்தையும் இதன்மூலம் அறியமுடியும்.