Primary tabs
-
6.3 17-ஆம் நூற்றாண்டு வரை இலக்கியச் சொற்பொருள் வழக்கு
தமிழ் வரலாற்றை நோக்கும்போது, தமிழ்மொழியில் காலந்தோறும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததை அறிய முடிகின்றது. பல்வேறு காலங்களில் மொழி அடைந்த மாற்றத்தை, காலமுறைப்படி ஆராய இலக்கிய, இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள் போன்றன துணை புரிகின்றன. பழங்காலத்தில் எழுதப்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியக் காலம் முதல் பதினேழாம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை சொற்பொருள் மாற்றத்தில் சில மாற்றங்களே ஏற்பட்டிருப்பதைக் கீழ்க்காணும் அட்டவணை புலப்படுத்துவதைக் காணலாம்.