தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாடமுன்னுரை

        இலக்கியமும் திறனாய்வும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை என்று முன்னர்க் கூறியிருக்கிறோம். இலக்கியம் இன்றேல் திறனாய்வு இல்லை; இலக்கியத்திற்காகத் தானே திறனாய்வு! எனவே, இந்த இலக்கியம் எத்தகையது, இதன் அடிப்படைகள் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறு அறிந்துகொண்டு, திறனாய்வு அதன்மேல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பின்னால் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

        இலக்கியத்தின் அடிப்படைப் பண்பு, அது வாழ்க்கையோடு இணைந்து கிடக்கிறது என்பதுதான். எனவே, இலக்கியமும் வாழ்க்கையும் என்பது பற்றி இந்தப் பாடத்தில் பார்க்கலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:23:30(இந்திய நேரம்)