தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.0

  • 4.0 பாட முன்னுரை

    தமிழகத்தின் வரலாற்றையும் சமூக நிலையையும் பற்றி அறிய உதவுவன அவ்வக்கால இலக்கியங்களே. தமிழக வரலாற்றில் நாயக்கர் ஆட்சி தோற்றுவிக்கப்பட்டு 400 ஆண்டுகள் நிலைத்திருந்தது. இக்காலத்தில் பள்ளு, உலா, தூது, கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி முதலிய சிறிய இலக்கியங்கள் அதிக அளவில் தோன்றின. இவை சிற்றிலக்கியங்கள் என்று கூறப்பட்டன. வடமொழியில் இவை பிரபந்தங்கள் என்று சொல்லப்பட்டன.

    இலக்கியத்தில் தோன்றிய இந்தப் புதிய வகையினை “விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” என்று பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சிற்றிலக்கியங்கள் அகம் பற்றியன, புறம் பற்றியன, பக்தி பற்றியன எனப் பல வகைகளாக உள்ளன. இவை பெரும்பாலும் மிகுதியான கற்பனை கொண்டு அமைந்தவை. தமிழகத்தின் வரலாறு, சமூகநிலை ஆகியன பற்றிச் சிற்றிலக்கியங்கள் வாயிலாக ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:44:46(இந்திய நேரம்)