Primary tabs
-
பாடம் - 6இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
சங்க இலக்கியச் செய்யுள் அமைப்புக் குறித்துத் தெரிவிக்கின்றது. காப்பியங்களின் பாடுபொருள் குறித்து எடுத்துரைக்கின்றது.
இடைக்கால இலக்கியங்களின் வடிவம் குறித்துக் குறிப்பிடுகின்றது. இக்கால இலக்கியங்களின் மையப் பொருள் குறித்து விளக்குகின்றது.
இக்கால இலக்கியங்களின் பாடுபொருள், உத்திமுறை குறித்துக் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?சங்க இலக்கியங்களின் உள்ளடக்கம் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
காப்பியங்களின் அமைப்பு முறை குறித்து அறியலாம்.
இடைக்கால இலக்கியங்களில் காணலாகும் அணி வகைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
இக்கால இலக்கியங்களின் உத்திமுறைகளைக் குறித்துத் தெளிவாக அறியலாம்.