தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பகுதி 6.0-பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை
     

    குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் உள்ளன என்பதைப் பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பொறுப்புகள், குடும்பம் என்ற அமைப்பில் உள்ள ஒவ்வொருவரோடும் தொடர்பு உடையவை. எனவே, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் கடமையை உணர்ந்து வாழவேண்டும் என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.
     

    மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து


    (குறள்: 90)
     

    (மோப்ப = முகந்து பார்த்தால், குழையும் = வாடும், அனிச்சம் = அனிச்ச மலர், முகம்திரிந்து = முகம் மலராமல், நோக்க = பார்த்தால், விருந்து = விருந்தினர்)

    என்னும் குறளுக்கு ஏற்ப விருந்தோம்பல் பண்பு, குடும்பத்தில் விளங்க வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.

    குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாகத் திகழ வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அந்தக் குடும்பம் எவ்வாறு அழிந்து போகும் என்பதைத் தெரிவிக்க ‘இருண்ட வீடு’ என்னும் காவியத்தைப் படைத்துள்ளார் பாரதிதாசன். இவை பற்றிய கருத்துகள் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:54:21(இந்திய நேரம்)