Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
1)பாஞ்சாலி சபதம் - நூல்குறிப்பு எழுதுக?இந்தியப் பகுதிகளில் நெடுங்காலமாக வழங்கி வந்த இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் உள்ள ஒரு நிகழ்ச்சியைக் காவியமாக எழுதினார் பாரதியார். 1912-இல் பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த பொழுது எழுதினார். பலர் இருக்கும் சபையில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அவலத்தினைச் சித்தரித்துள்ளார். பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வீமன், அருச்சுனன், பாஞ்சாலி ஆகிய மூவரும் சபதம் செய்கின்றனர்.