Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2)
வீமனின் கோபத்தை அருச்சுனன் தணித்த விதத்தினைக் குறிப்பிடுக.தருமன் மீது கடுஞ்சினம் கொண்ட வீமனைப் பார்த்து அருச்சுனன், வீமனே! மூன்று உலகுக்கும் நாயகனான தருமனைச் சினந்து இவ்வாறு சொன்னாய்! தருமத்தின் வாழ்வைச் சூது விழுங்கும். ஆனால் மறுபடியும் தருமமே வெல்லும். இது இயற்கை உண்மை. இன்றைக்கு நாம் பொறுத்திருப்போம். காலம் நிச்சயம் மாறும். அந்த நேரத்தில் தருமம் வெல்வதைக் காணலாம் என்றான்.