Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
பாஞ்சாலி சபதத்தில் காணப்படும் வருணனைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுக.பாண்டவர்கள் அஸ்தினாபுரத்திற்குச் செல்லும் வழியில், மாலைநேர அழகு பற்றி அருச்சுனன் பாஞ்சாலியிடம் சொல்வதாக அமைந்துள்ள பகுதியில், பத்துக்கோடி மின்னலை எடுத்து உருக்கி வார்த்து அதை வட்டமாகச் செய்ததைப் போன்று சூரியன் காணப்படுகின்றான் என்று வருணிப்பதைக் காணலாம்.