முகப்பு |
கபிலர் |
13. குறிஞ்சி |
மாசு அறக் கழீஇய யானை போலப் |
||
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் |
||
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் |
||
நோய் தந்தனனே - தோழி!- |
||
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே. |
உரை | |
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர் |
18. குறிஞ்சி |
வேரல் வேலி வேர் கோட் பலவின் |
||
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! |
||
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல் |
||
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள் |
||
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே! |
உரை | |
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர் |
25. குறிஞ்சி |
யாரும் இல்லை; தானே கள்வன்; |
||
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? |
||
தினை தாள் அன்ன சிறு பசுங் கால |
||
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் |
||
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே. |
உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் |
38. குறிஞ்சி |
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை |
||
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் |
||
குன்ற நாடன் கேண்மை என்றும் |
||
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண் |
||
நீரொடு ஓராங்குத் தணப்ப, |
||
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. - கபிலர் |
42. குறிஞ்சி |
காமம் ஒழிவதுஆயினும்-யாமத்துக் |
||
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி |
||
விடரகத்து இயம்பும் நாட!- எம் |
||
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே? |
உரை | |
இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது - கபிலர் |
87. குறிஞ்சி |
'மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் |
||
கொடியோர்த் தெறூஉம்' என்ப; யாவதும் |
||
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்; |
||
பசைஇப் பசந்தன்று, நுதலே; |
||
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே. |
உரை | |
தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது. - கபிலர் |
95. குறிஞ்சி |
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி |
||
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற் |
||
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள் |
||
நீர் ஓரன்ன சாயல் |
||
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே. |
உரை | |
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |
100. குறிஞ்சி |
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் |
||
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும் |
||
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென, |
||
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் |
||
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் |
||
பாவையின் மடவந்தனளே- |
||
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர் |
106. குறிஞ்சி |
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் |
||
வரை இழி அருவியின் தோன்றும் நாடன் |
||
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின் |
||
வந்தன்று-வாழி, தோழி!-நாமும் |
||
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு, |
||
'தான் மணந்தனையம்' என விடுகம் தூதே. |
உரை | |
தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது. - கபிலர் |
115. குறிஞ்சி |
பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே? |
||
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு, |
||
புலவி தீர அளிமதி-இலை கவர்பு, |
||
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல், |
||
மென்நடை மரையா துஞ்சும் |
||
நன் மலை நாட!-நின் அலது இலளே. |
உரை | |
உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது. - கபிலர் |
121. குறிஞ்சி |
மெய்யே, வாழி?-தோழி-சாரல் |
||
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை |
||
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற |
||
கோட்டொடு போகியாங்கு, நாடன் |
||
தான் குறி வாயாத் தப்பற்குத் |
||
தாம் பசந்தன, என் தட மென் தோளே. |
உரை | |
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனால் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி, அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று, ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவ |
142. குறிஞ்சி |
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ, |
||
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை |
||
தான் அறிந்தன்றோ இலளே-பானாள் |
||
பள்ளி யானையின் உயிர்த்து, என் |
||
உள்ளம், பின்னும், தன் உழையதுவே! |
உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர் |
153. குறிஞ்சி |
குன்றக் கூகை குழறினும், முன்றிற் |
||
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும், |
||
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே, |
||
ஆர் இருட் கங்குல் அவர்வயின் |
||
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே. |
உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது. - கபிலர் |
187. குறிஞ்சி |
செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி |
||
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி, |
||
பெரு வரை நீழல் உகளும் நாடன் |
||
கல்லினும் வலியன்-தோழி!- |
||
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே. |
உரை | |
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. - கபிலர் |
198. குறிஞ்சி |
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் |
||
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை |
||
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு, |
||
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல் |
||
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர் |
||
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து |
||
ஆரம் நாறும் மார்பினை, |
||
வாரற்கதில்ல; வருகுவள் யாயே. |
உரை | |
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர் |
208. குறிஞ்சி |
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப் |
||
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை |
||
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார், |
||
நின்று கொய மலரும் நாடனொடு |
||
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே, |
உரை | |
வரை விடை, 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
225. குறிஞ்சி |
கன்று தன் பய முலை மாந்த, முன்றில் |
||
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட! |
||
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் |
||
வீறு பெற்று மறந்த மன்னன் போல, |
||
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க் |
||
கலி மயிற் கலாவத்தன்ன இவள் |
||
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே. |
உரை | |
வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. - கபிலர் |
241. குறிஞ்சி |
யாம் எம் காமம் தாங்கவும், தாம் தம் |
||
கெழுதகைமையின் அழுதன-தோழி!- |
||
கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர் |
||
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி, |
||
ஏறாது இட்ட ஏமப் பூசல் |
||
விண் தோய் விடரகத்து இயம்பும் |
||
குன்ற நாடற் கண்ட எம் கண்ணே. |
உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
246. நெய்தல் |
'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை |
||
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி, |
||
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர் |
||
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு, |
||
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும் |
||
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் |
||
இளையரும் மடவரும் உளரே; |
||
அலையாத் தாயரொடு நற்பாலோரே. |
உரை | |
சிறைப்புறம். - கபிலர் |
249. குறிஞ்சி |
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து, |
||
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப, |
||
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக் |
||
குன்றம் நோக்கினென்-தோழி!- |
||
பண்டையற்றோ, கண்டிசின், நுதலே? |
உரை | |
வரைவிடை வைப்ப, 'ஆற்றாகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |
264.குறிஞ்சி |
கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை, |
||
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி, |
||
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு |
||
நயந்தனன் கொண்ட கேண்மை |
||
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே. |
உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்றது. - கபிலர் |
288. குறிஞ்சி |
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து |
||
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன் |
||
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற |
||
இன்னாமையினும், இனிதோ- |
||
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே? |
உரை | |
தலைமகனது வரவுணர்ந்து, 'நம்பெருமான் நமக்கு அன்பிலன்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கபிலர் |
291. குறிஞ்சி |
சுடு புன மருங்கில் கலித்த ஏனற் |
||
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே |
||
இசையின் இசையா இன் பாணித்தே; |
||
கிளி, 'அவள் விளி' என, விழல் ஒல்லாவே; |
||
அது புலந்து அழுத கண்ணே, சாரல் |
||
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை |
||
வண்டு பயில் பல் இதழ் கலைஇ, |
||
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே. |
உரை | |
பாங்கற்கு உரைத்தது. - கபிலர் |
312. குறிஞ்சி |
இரண்டு அறி கள்வி நம் காதலோளே: |
||
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன் |
||
முள்ளூர்க் கானம் நாற வந்து, |
||
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்; |
||
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து, |
||
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி, |
||
அமரா முகத்தள் ஆகித் |
||
தமர் ஓரன்னள், வைகறையானே. |
உரை | |
இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது. - கபிலர் |
355. குறிஞ்சி |
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே; |
||
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே; |
||
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று; |
||
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் |
||
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!- |
||
வேங்கை கமழும் எம் சிறுகுடி |
||
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே. |
உரை | |
இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது. - கபிலர் |
357. குறிஞ்சி |
முனி படர் உழந்த பாடு இல் உண்கண் |
||
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள், |
||
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு, |
||
நல்ல என்னும் சொல்லை மன்னிய- |
||
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன் |
||
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை |
||
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் |
||
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே. |
உரை | |
தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. - கபிலர் |
361. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு |
||
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை |
||
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு |
||
காலை வந்த முழுமுதற் காந்தள் |
||
மெல் இலை குழைய முயங்கலும், |
||
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே. |
உரை | |
வரைவு மலிந்தவழித் தோழி, 'நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.- கபிலர் |
385. குறிஞ்சி |
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை, |
||
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ |
||
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல் |
||
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும் |
||
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் |
||
அன்றை அன்ன நட்பினன்; |
||
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே. |
உரை | |
வேற்று வரைவு மாற்றியது. - கபிலர் |