|
30
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
|
|
|
|
|
|
[
பவத்திறம்அறுக எனப்பாவைநோற்ற பாட்டு
]
|
|
|
|
|
|
தானம் தாங்கிச் சீலந் தலைநின்று
|
|
|
போன பிறப்பில் புகுந்ததை உணர்ந்தோள்
|
|
|
புத்த தன்ம சங்கம் என்னும்
|
|
|
முத்திற மணியை மும்மையின் வணங்கிச்
|
|
5
|
சரணா கதியாய்ச் சரண்சென்று அடைந்தபின்
|
உரை
|
|
|
|
|
முரணாத் திருவற மூர்த்தியை மொழிவோன்
|
|
|
அறிவு வறிதாய் உயிர்நிறை காலத்து
|
|
|
முடிதயங்கு அமரர் முறைமுறை இரப்பத
|
|
|
துடித லோகம் ஒழியத் தோன்றிப்
|
|
10
|
போதி மூலம் பொருந்தி இருந்து
|
|
|
|
|
|
மாரனை வென்று வீரன் ஆகிக்
|
|
|
குற்றம் மூன்றும் முற்ற அறுக்கும்
|
|
|
வாமன் வாய்மை ஏமக் கட்டுரை
|
|
|
இறந்த காலத்து எண்ணில்புத் தர்களும
|
|
15
|
சிறந்துஅருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
|
உரை
|
|
|
|
|
ஈரறு பொருளின் ஈந்தநெறி உடைத்தாய்ச்
|
|
|
சார்பின் தோன்றித் தத்தமில் மீட்டும்
|
|
|
இலக்குஅணத் தொடர்தலின்
|
|
|
மண்டில வகையாய் அறியக் காட்டி
|
உரை
|
20
|
எதிர்முறை ஒப்ப மீட்சியும் ஆகி
|
|
|
|
|
|
ஈங்குஇது இல்லா வழிஇல் லாகி
|
|
|
ஈங்குஇது உள்ள வழிஉண் டாகலில்
|
|
|
தக்க தக்க சார்பில் தோற்றம்எனச்
|
|
|
சொற்றகப் பட்டும் இலக்கணத் தொடர்பால்
|
|
25
|
கருதப் பட்டும் கண்டம்நான்கு உடைத்தாய்
|
உரை
|
|
|
|
|
மருவிய சந்தி வகைமூன்று உடைத்தாய்த்
|
உரை
|
|
தோற்றம் பார்க்கின் மூன்று வகையாய்த்
|
|
|
தோற்றற்கு ஏற்ற காலம்மூன்று உடைத்தாய்க்
|
உரை
|
|
குற்றமும் வினையும் பயனும் விளைந்து
|
|
30
|
நிலையில வறிய துன்பம்என நோக்க
|
|
|
|
|
|
உலையா வீட்டிற்கு உறுதி யாகி
|
உரை
|
|
நால்வகை வாய்மைக்குச் சார்பிடன் ஆகி
|
|
|
ஐந்துவகைக் கந்தத்து அமைதி ஆகி
|
|
|
மெய்வகை ஆறு வழக்குமுகம் எய்தி
|
உரை
|
35
|
நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி
|
|
|
|
|
|
இயன்றநால் வகையால் வினாவிடை உடைத்தாய்
|
உரை
|
|
நின்மதி இன்றி உழ்பாடு இன்றிப்
|
|
|
பின்போக் கல்லது பொன்றக் கெடாதாய்ப்
|
|
|
பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய்
|
|
40
|
யானும் இன்றி என்னதும் இன்றிப்
|
|
|
|
|
|
போனதும் இன்றி வந்ததும் இன்றி
|
|
|
முடித்தலும் இன்றி முடிவும் இன்றி
|
|
|
வினையும் பயனும் பிறப்பும் வீடும்
|
|
|
இனையன எல்லாம் தானே ஆகிய
|
உரை
|
45
|
பேதைமை செய்கை உணர்வே அருவுரு
|
|
|
|
|
|
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
|
|
|
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
|
|
|
இற்றுஎன வகுத்த இயல்புஈ ராறும்
|
|
|
பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர்
|
|
50
|
அறியார் ஆயின் ஆழ்நரகு அறிகுவர்
|
உரை
|
|
|
|
|
பேதைமை என்பது யாதுஎன வினவின்
|
|
|
ஓதிய இவற்றை உணராது மயங்கி
|
|
|
இயற்படு பொருளால் கண்டது மறந்து
|
|
|
முயல்கோடு உண்டுஎனக் கேட்டது தெளிதல்
|
உரை
|
55
|
உலகம் மூன்றினும் உயிராம் உலகம்
|
|
|
|
|
|
அலகில பல்உயிர் அறுவகைத்து ஆகும்
|
|
|
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
|
|
|
தொக்க விலங்கும் பேயும் என்றே
|
|
|
நல்வினை தீவினை என்றுஇரு வகையால்
|
|
60
|
சொல்லப் பட்ட கருவில் சார்தலும்
|
|
|
|
|
|
கருவில் பட்ட பொழுதினுள் தோற்றி
|
|
|
வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு
|
|
|
மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்
|
உரை
|
|
தீவினை என்பது யாதுஎன வினவின்
|
|
65
|
ஆய்தொடி நல்லாய் ஆங்குஅது கேளாய்
|
|
|
|
|
|
கொலையே களவே காமத் தீவிழை
|
|
|
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
|
|
|
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
|
|
|
சொல்எனச் சொல்லிற் தோன்றுவ நான்கும்
|
|
70
|
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று
|
|
|
|
|
|
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்
|
|
|
பத்து வகையால் பயன்தெரி புலவர்
|
|
|
இத்திறம் படரார் படர்குவர் ஆயின்
|
|
|
விலங்கும் பேயும் நரகரும் ஆகிக்
|
|
75
|
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்
|
உரை
|
|
|
|
|
நல்வினை என்பது யாதுஎன வினவின்
|
|
|
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
|
|
|
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
|
|
|
மேல்என வகுத்த ஒருமூன்று திறத்துத்
|
|
80
|
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
|
|
|
|
|
|
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
|
உரை
|
|
உணர்வுஎனப் படுவது உறங்குவோர் உணர்வின்
|
|
|
புரிவுஇன்று ஆகிப் புலன்கொளா ததுவே
|
உரை
|
|
அருவுரு என்பதுஅவ் வுணர்வு சார்ந்த
|
|
85
|
உயிரும் உடம்பும் ஆகும் என்ப
|
உரை
|
|
|
|
|
வாயில் ஆறும் ஆயும் காலை
|
|
|
உள்ளம் உறுவிக்க உறும்இடன் ஆகும்
|
உரை
|
|
ஊறுஎன உரைப்பது உள்ளமும் வாயிலும்
|
|
|
வேறு புலன்களை மேவுதல் என்ப
|
உரை
|
90
|
நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல்
|
|
|
|
|
|
வேட்கை விரும்பி நுகர்ச்சிஆ ராமை
|
|
|
பற்றுஎனப் படுவது பசைஇய அறிவே
|
உரை
|
|
பவம்எனப் படுவது கரும ஈட்டம்
|
|
|
தருமுறை இதுஎனத் தாம்தாம் சார்தல்
|
உரை
|
95
|
பிறப்புஎனப் படுவதுஅக் கருமப் பெற்றியின்
|
|
|
|
|
|
உறப்புணர் உள்ளம் சார்பொடு கதிகளில்
|
|
|
காரண காரிய உருக்களில் தோன்றல்
|
உரை
|
|
பிணிஎனப் படுவது சார்பில் பிறிதாய்
|
|
|
இயற்கையின் திரிந்துஉடம்பு இடும்பை புரிதல்
|
|
100
|
மூப்புஎன மொழிவது அந்தத்து அளவும்
|
|
|
|
|
|
தாக்குநிலை யாமையின் தாம்தளர்ந் திடுதல்
|
|
|
சாக்காடு என்பது அருவுருத் தன்மை
|
|
|
யாக்கை வீழ்கதிர் எனமறைந் திடுதல்
|
உரை
|
|
பேதைமை சார்வாச் செய்கை ஆகும்
|
|
105
|
செய்கை சார்வா உணர்ச்சி ஆகும்
|
|
|
|
|
|
உணர்ச்சி சார்வா அருவுரு ஆகும்
|
|
|
அருவுருச் சார்வா வாயில் ஆகும்
|
|
|
வாயில் சார்வா ஊறுஆ கும்மே
|
|
|
ஊறு சார்ந்து நுகர்ச்சி ஆகும்
|
|
110
|
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
|
|
|
|
|
|
வேட்கை சார்ந்து பற்றுஆ கும்மே
|
|
|
பற்றில் தோன்றும் கருமத் தொகுதி
|
|
|
கருமத் தொகுதி காரண மாக
|
|
|
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
|
|
115
|
தோற்றம் சார்பின் மூப்புப்பிணி சாக்காடு
|
|
|
|
|
|
அவலம் அரற்றுக் கவலைகை யாறுஎனத்
|
|
|
தவல்இல் துன்பம் தலைவரும் என்ப
|
|
|
ஊழின்மண் டிலமாச் சூழும்இந் நுகர்ச்சி
|
உரை
|
|
பேதைமை மீளச் செய்கை மீளும்
|
|
120
|
செய்கை மீள உணர்ச்சி மீளும்
|
|
|
|
|
|
உணர்ச்சி மீள அருவுரு மீளும
|
|
|
அருவுரு மீள வாயில் மீளும்
|
|
|
வாயில் மீள ஊறு மீளும்
|
|
|
ஊறு மீள நுகர்ச்சி மீளும்
|
|
125
|
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
|
|
|
|
|
|
வேட்கை மீளப் பற்று மீளும்
|
|
|
பற்று மீளக் கருமத் தொகுதி
|
|
|
மீளும் கருமத் தொகுதி மீளத்
|
|
|
தோற்றம் மீளும் தோற்றம் மீளப்
|
|
130
|
பிறப்பு மீளும் பிறப்புப் பிணிமூப்புச்
|
|
|
|
|
|
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
|
|
|
கையாறு என்றுஇக் கடையில் துன்பம்
|
|
|
எல்லாம் மீளும்இவ் வகையான் மீட்சி
|
|
ஆதிக் கண்டம் ஆகும் என்ப
|
|
135
|
பேதைமை செய்கை என்றுஇவை இரண்டும்
|
|
|
|
|
|
காரண வகைய ஆத லானே
|
உரை
|
|
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப
|
|
|
உணர்ச்சி அருவுரு வாயில் ஊறே
|
|
|
நுகர்ச்சி என்று நோக்கப் படுவன
|
|
140
|
முன்னவற்று இயல்பால் துன்னிய ஆதலின்
|
உரை
|
|
|
|
|
மூன்றாம் கண்டம் வேட்கை பற்றுக்
|
|
|
கரும ஈட்டம் எனக்கட் டுரைப்பவை
|
|
|
மற்றுஅப் பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள்
|
|
|
குற்றமும் வினையும் ஆக லானே
|
உரை
|
145
|
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே
|
|
|
|
|
|
மூப்பே சாவுஎன மொழிந்திடும் துன்பம்
|
|
|
எனஇவை பிறப்பில் உழக்குபயன் ஆதலின்
|
உரை
|
|
பிறப்பின் முதல்உணர்வு ஆதிச் சந்தி
|
|
|
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்
|
|
150
|
புகர்ச்சிஇன்று அறிவது இரண்டாம் சந்தி
|
|
|
|
|
|
கன்மக் கூட்டத் தொடுவரு பிறப்பிடை
|
|
|
முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி
|
|
|
மூன்றுவகைப் பிறப்பு மொழியுங் காலை
|
உரை
|
|
ஆன்றபிற மார்க்கத்து ஆய உணர்வே
|
|
155
|
தோன்றல் வீடுஎனத் துணிந்து தோன்றியும்
|
|
|
|
|
|
உணர்வுள் அடங்க உருவாய்த் தோன்றியும்
|
|
|
உணர்வும் உருவும் உடங்கத் தோன்றிப்
|
|
|
புணர்தரு மக்கள் தெய்வம்விலங்கு ஆகையும்
|
உரை
|
|
கால மூன்றும் கருதுங் காலை
|
|
160
|
இறந்த காலம் என்னல் வேண்டும்
|
|
|
|
|
|
மறந்த பேதைமை செய்கையால் அவற்றை
|
|
|
நிகழ்ந்த காலம்என நேரப் படுமே
|
|
|
உணர்வே அருவுரு வாயில் ஊறே
|
|
|
நுகர்வே வேட்கை பற்றே பவமே
|
|
165
|
தோற்றம் என்றுஇவை சொல்லுங் காலை
|
|
|
|
|
|
எதிர்கா லம்என இசைக்கப் படுமே
|
|
|
பிறப்பே பிணியே மூப்பே சாவே
|
|
|
அவலம் அரற்றுக் கவலைகை யாறுகள்
|
உரை
|
|
குலவிய குற்றம்எனக் கூறப் படுமே
|
|
170
|
அவாவே பற்றே பேதைமை என்றுஇவை
|
|
|
|
|
|
புனையும்அடை பவமும் வினைசெயல் ஆகும்
|
|
|
உணர்ச்சி அருவுரு வாயில் ஊறே
|
|
|
நுகர்ச்சி பிறப்பு மூப்புப்பிணி சாவுஇவை
|
|
|
நிகழ்ச்சிப்பயன் ஆங்கே நேருங் காலைக்
|
உரை
|
175
|
குற்றமும் வினையும் பயனும் துன்பம்
|
|
|
|
|
|
பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா
|
|
|
எப்பொரு ளுக்கும் ஆன்மா இலைஎன
|
|
|
இப்படி உணரும் இவைவீட் டியல்பாம்.
|
உரை
|
|
உணர்வே அருவுரு வாயில் ஊறே
|
|
180
|
நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே
|
|
|
|
|
|
அவலம் அரற்றுக் கவலைகை யாறுஎன
|
|
|
நுவலப் படுவன நோயா கும்மே
|
உரை
|
|
அந்நோய் தனக்குப்
|
|
|
பேதைமை செய்கை அவாவே பற்றுக்
|
|
185
|
கரும ஈட்டம்இவை காரணம் ஆகும்
|
உரை
|
|
|
|
|
துன்பம் தோற்றம் பற்றே காரணம்
|
|
|
இன்பம் வீடே பற்றுஇலி காரணம்
|
|
|
ஒன்றிய உரையே வாய்மை நான்காவது
|
உரை
|
|
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
|
|
190
|
உள்ள அறிவுஇவை ஐங்கந்தம் ஆவன
|
உரை
|
|
|
|
|
அறுவகை வழக்கு மறுஇன்று கிளப்பின்
|
|
|
தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
|
|
|
இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த
|
|
|
உண்மை வழக்கும் இன்மை வழக்கும்
|
|
195
|
உள்ளது சார்ந்த உண்மை வழக்கும்
|
|
|
|
|
|
இல்லது சார்ந்த இன்மை வழக்கும்
|
|
|
உள்ளது சார்ந்த இன்மை வழக்கும்
|
|
|
இல்லது சார்ந்த உண்மை வழக்கும்என,
|
உரை
|
|
சொல்லிய தொகைத்திறம் உடம்புநீர்
நாடு
|
|
200
|
தொடர்ச்சி வித்து முளைதாள் என்றுஇந்
|
|
|
|
|
|
நிகழ்ச்சியில் அவற்றை நெல்என வழங்குதல்
|
உரை
|
|
இயல்பு மிகுத்துஉரை ஈறுடைத்து என்றும்
|
|
|
தோன்றிற்று என்றும் மூத்தது என்றும்
|
|
|
மூன்றின் ஒன்றின் இயல்புமிகுத்து உரைத்தல்
|
உரை
|
205
|
இயைந்துரை என்பது எழுத்துப்பல கூடச்
|
|
|
|
|
|
சொல்எனத் தோற்றும் பலநாள் கூடிய
|
|
|
எல்லையைத் திங்கள் என்று வழங்குதல்
|
உரை
|
|
உள்வழக்கு உணர்வுஇல் வழக்கு முயல்கோடு
|
|
|
உள்ளது சார்ந்த உள்வழக்கு ஆகும்
|
|
210
|
சித்தத் துடனே ஒத்த நுகர்ச்சி
|
|
|
|
|
|
உள்ளது சார்ந்த இல்வழக்கு ஆகும்
|
|
|
சித்தம்உற் பவித்தது மின்போல் என்கை
|
|
|
இல்லது சார்ந்த உண்மைவழக்கு ஆகும்
|
|
|
காரணம் இன்றிக் காரியம் நேர்தல்
|
|
215
|
இல்லது சார்ந்த இல்வழக்கு ஆகும்
|
|
|
|
|
|
முயல்கோடு இன்மையின் தோற்றமும் இல்எனல்.
|
உரை
|
|
நான்கு நயம்எனத் தோன்றப் படுவன
|
|
|
ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்புஎன்க.
|
|
|
காரண காரியம் ஆகிய பொருள்களை
|
|
220
|
ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயமாம்
|
|
|
|
|
|
வீற்றுவீற் றாக வேதனை கொள்வது
|
|
|
வேற்றுமை நயம்என வேண்டல் வேண்டும்
|
|
|
பொன்றக் கெடாஅப் பொருள்வழிப் பொருள்களுக்கு
|
|
|
ஒன்றிய காரணம் உதவுகா ரியத்தைத்
|
|
225
|
தருதற்கு உள்ளம் தான்இலை என்றல்
|
|
|
|
|
புரிவின்மை நயம்எனப் புகறல் வேண்டும்
|
|
|
நெல்வித் தகத்துள் நெல்முளை தோற்றும்எனல்
|
|
|
நல்ல இயல்புநயம் இவற்றில்நாம் கொள்பயன்
|
உரை
|
|
தொக்க பொருள்அலது ஒன்றுஇல்லை என்றும்
|
|
230
|
அப்பொருள் இடைப்பற்று ஆகாது என்றும்
|
|
|
|
|
|
செய்வா னொடுகோட் பாடுஇலை என்றும்
|
|
|
எய்துகா ரணத்தால் காரியம் என்றும்
|
|
|
அதுவும் அன்றுஅது அலாததும் அன்றுஎன்றும்
|
|
|
விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும்
|
உரை
|
235
|
வினாவிடை நான்குஉள
|
|
|
|
|
|
துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல்
|
|
|
வினாவின் விடுத்தல் வாய்வா ளாமைஎனத்
|
உரை
|
|
தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால்
|
|
|
கேடுஉண்டு என்றல் துணிந்துசொலல் ஆகும்
|
உரை
|
240
|
செத்தான் பிறப்பா னோபிற வானோ
|
|
|
|
|
|
என்று செப்பின்
|
|
|
பற்றுஇறந் தானோ அன்மக னோஎனல்
|
|
|
மிகக்கூ றிட்டு மொழிதல்என விளம்புவர்
|
உரை
|
|
வினாவின் விடுத்தல் முட்டை முந்திற்றோ
|
|
245
|
பனைமுந் திற்றோ எனக்கட் டுரைசெய்
|
|
|
|
|
|
என்றால் எம்முட்டைக்கு எப்பனை என்றல்
|
உரை
|
|
வாய்வா ளாமை ஆகா யப்பூப்
|
|
|
பழைதோ புதிதோ என்று புகல்வான்
|
|
|
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல்
|
உரை
|
250
|
கட்டும் வீடு அதன்கா ரணத்தது
|
|
|
|
|
|
ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை
|
|
|
யாம்மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
|
|
|
காமம் வெகுளி மயக்கம் காரணம்
|
உரை
|
|
அநித்தம் துக்கம் அநான்மா அசுசிஎனத்
|
|
255
|
தனித்துப் பார்த்துப் பற்றுஅறுத் திடுதல்
|
உரை
|
|
|
|
|
மைத்திரி கருணா முதிதைஎன்று அறிந்து
|
|
|
திருந்துநல் உணர்வால் செற்றம்அற் றிடுக
|
உரை
|
|
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
|
|
|
கருதி உய்த்து மயக்கம் கடிக
|
உரை
|
260
|
இந்நால் வகையால் மனத்துஇருள் நீங்குஎன்று
|
|
|
|
|
|
முன்பின் மலையா மங்கல மொழியின்
|
|
|
ஞான தீபம் நன்கனம் காட்ட,
|
|
|
தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப்
|
|
|
பவத்திறம் அறுகெனப் பாவைநோற்றனள்என்.
|
உரை
|
|
பவத்திறம் அறுக எனப் காதைமுற்றிற்று.
|
|
|
|
|
|
பவத்திறம்
அறுகெனப் பாவை நோற்ற காதை
முற்றிற்று..
|
|
|
|
|
|
மணிமேகலை
முற்றிற்று
|
|
|