Primary tabs
-
4.2 இருதிணைப் பொதுப்பெயர்கள்
பண்டைக் காலத்தில், மக்களுக்கு வைக்கும் பெயர்களைத் தம்மோடு வாழும் விலங்கு, தோட்டம் போன்றவற்றிற்கும் இட்டு வழங்கினர். அதனால் ஒரே பெயர் இருதிணைகளிலும் கலந்து வழங்கிற்று. அதனை விரவுப் பெயர் என்று வழங்கினர். மேலும் சூரியன் உதித்தான், சூரியன் உதித்தது, சந்திரன் உதித்தான், சந்திரன் உதித்தது என ஒரு பொருளையே இருதிணையிலும் குறிப்பிடுவதும் உண்டு.
உயர் திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவான இப்பெயர்கள் இருதிணைப் பொதுப் பெயர்கள் என அழைக்கப்படுகின்றன. இவை தம்மோடு வரும் பெயராலும் வினையாலும் பால்களைச் சுட்டி நிற்கும்.
முதற் பெயர்கள் நான்கும் சினைப் பெயர்கள் நான்கும், சினைமுதற் பெயர்கள் நான்கும், முறைப் பெயர்கள் இரண்டும், தன்மைப் பெயர் நான்கும், முன்னிலைப் பெயர்கள் ஐந்தும், எல்லாம், தான், தாம் என்பனவும், இவை போன்ற பிறவும் இருதிணைக்கும் உரிய பொதுப் பெயர்களாம்.
முதற்பெயர்- 4 (ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை)சினைப்பெயர்- 4 (ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை)சினைமுதற்பெயர்- 4 (ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை)முறைப்பெயர்- 2 (ஆண்மை, பெண்மை)தன்மைப்பெயர்- 4 (யான், நான், யாம், நாம்)முன்னிலைப்பெயர்- 5 (எல்லீர், நீயிர், நீவிர், நீர், நீ)படர்க்கைப் பெயர்- 2 (தான், தாம்)மூவிடப் பொதுப்பெயர்- 1 (எல்லாம்)- 26ஆக இருதிணைப் பொதுப் பெயர்கள் மொத்தம் இருபத்து ஆறு ஆகும்.
முதற்பெயர் நான்கும் சினைப்பெயர் நான்கும்
சினைமுதல் பெயரொரு நான்கும் முறை இரண்டும்
தன்மை நான்கும் முன்னிலை ஐந்தும்
எல்லாம் தாம் தான் இன்னன பொதுப்பெயர்(நன்னூல்:282)
முதற்பெயர் என்பது முழுமையான ஒரு பொருளுக்கு வழங்கப்பட்டு வரும் பெயர் ஆகும். இது ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை என நான்கு வகைப்படும்.
(1) ஆண்மை முதற்பெயர்சாத்தன்- இவன்சாத்தன்- இவ்வெருதுசாத்தன் என்னும் ஆண்மை முதற்பெயர் இருதிணை ஆண்பாலுக்கும் பொது ஆயிற்று. சாத்தன் என்ற பெயர் வீட்டில் உள்ள மகனுக்கும், அதே வீட்டில் வளருகின்ற ஒரு காளை மாட்டுக்கும் பெயராக அமைந்துள்ளது. எனவே சாத்தன் என்பது இரு திணை ஆண்பாலுக்கும் பொதுவாக வந்துள்ளது.
(2) பெண்மை முதற்பெயர்சாத்தி- இவள்சாத்தி- இப்பசுசாத்தி என்னும் பெண்மை முதற்பெயர் இருதிணைப் பெண்பாலுக்கும் பொது ஆயிற்று. மேலே கூறியது போலவே, மகளுக்கும், வீட்டில் வளருகின்ற பசுமாட்டிற்கும் சாத்தி என்ற பெயர் பொதுவாக வந்துள்ளது.
(3) ஒருமை முதற்பெயர்கோதை இவன்- உயர்திணை ஆண்பால்கோதை இவள்- உயர்திணைப் பெண்பால்கோதை இது- அஃறிணை ஒன்றன்பால்கோதை என்ற ஒருமை முதற்பெயர், இருதிணையிலும் ஒருமை மூன்றற்கும் பொதுவாகி வந்துள்ளது.
(4) பன்மை முதற்பெயர்கோதைகள் இவர்- உயர்திணைப் பலர்பால்கோதைகள் இவை- அஃறிணைப் பலவின்பால்கோதைகள் என்னும் பன்மை முதற்பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொது ஆயிற்று.
உறுப்பின் காரணமாக வைக்கப்பட்டு வழங்கி வரும் பெயர் சினைப்பெயர் ஆகும். (சினை என்பதற்கு உறுப்பு என்று பொருள்.) இதுவும் ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை என நான்காகும்.
(1) ஆண்மைச் சினைப்பெயர்
முடவன் இவன்- உயர்திணை ஆண்பால்முடவன் இவ்வெருது- அஃறிணை ஆண்பால்முடவன் என்ற ஆண்மைச் சினைப்பெயர் இருதிணை ஆண்பாலுக்கும் பொதுவாயிற்று.
(2) பெண்மைச் சினைப்பெயர்
முடத்தி இவள்- உயர்திணைப் பெண்பால்முடத்தி இப்பசு- அஃறிணைப் பெண்பால்முடத்தி என்னும் பெண்மைச் சினைப்பெயர் இருதிணைப் பெண்பாலுக்கும் பொது ஆயிற்று.
(3) ஒருமைச் சினைப்பெயர்
செவியிலி இவன்- உயர்திணை ஆண்பால்செவியிலி இவள்- உயர்திணைப் பெண்பால்செவியிலி இது- அஃறிணை ஒன்றன்பால்செவியிலி என்ற ஒருமைச் சினைப்பெயர் இருதிணையிலும் ஒருமை மூன்றற்கும் பொது ஆயிற்று.
(4) பன்மைச் சினைப்பெயர்
செவியிலிகள் இவர்- உயர்திணைப் பலர்பால்செவியிலிகள் இவை- அஃறிணைப் பலவின்பால்செவியிலிகள் என்ற பன்மைச் சினைப்பெயர் இருதிணையிலும் பன்மைக்குப் பொது ஆயிற்று.
உறுப்பையும் உறுப்பை உடைய முதற்பொருளையும் கொண்டு வழங்கும் பெயர் சினை முதற்பெயர் ஆகும். இதுவும் ஆண்மை, பெண்மை, ஒருமை, பன்மை என நான்காகும்.
(1) ஆண்மைச் சினை முதற்பெயர்
முடக்கொற்றன் இவன்- உயர்திணை ஆண்பால்முடக்கொற்றன் இவ்வெருது- அஃறிணை ஆண்பால்இப்பெயர் இருதிணையிலும் ஆண்பாலுக்குப் பொதுவாக வந்தது.
(2) பெண்மைச் சினை முதற்பெயர்முடக்கொற்றி இவள்- உயர்திணைப் பெண்பால்முடக்கொற்றி இப்பசு- அஃறிணைப் பெண்பால்இப்பெயர் இருதிணையிலும் பெண்பாலுக்குப் பொதுவாக வந்தது.
(3) ஒருமைச் சினைமுதற்பெயர்கொடும்புற மருதி இவன்- உயர்திணை ஆண்பால்கொடும்புற மருதி இவள்- உயர்திணைப் பெண்பால்கொடும்புற மருதி இது- அஃறிணை ஒன்றன்பால்இப்பெயர் இருதிணையிலும் ஆண், பெண், ஒன்று என மூன்று ஒருமைக்கும் பொதுவாக வந்தது.
(4) பன்மைச் சினைமுதற்பெயர்கொடும்புற மருதிகள் இவர்- உயர்திணைப் பலர்பால்கொடும்புற மருதிகள் இவை- அஃறிணைப் பலவின்பால்இப்பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொதுவாக வந்தது.
உறவு பற்றி வரும் பெயர்கள் முறைப்பெயர் எனப்படும். இவை தந்தை, தாய் என்னும் இரண்டாகும்.
தந்தை இவன்தந்தை இவ்வெருதுஆண்மை முறைப்பெயர், இருதிணை ஆண்பாலுக்கும் பொது ஆயிற்று.
தாய் இவள்தாய் இப்பசுபெண்மை முறைப்பெயர், இருதிணைப் பெண்பாலுக்கும் பொது ஆயிற்று.
தன்மையில் வரும் யான், நான், யாம், நாம் ஆகிய நான்கும் இருதிணைக்கும் பொதுவாகும்.
யான் நம்பியான் நங்கையான் பறவையான் என்ற தன்மைப் பெயர்,
இரு திணை ஒருமை மூன்றற்கும்
பொது ஆயிற்று.
யாம் மக்கள்யாம் பறவைகள்யாம் என்ற தன்மைப் பெயர்,
இரு திணைப் பன்மைக்கும்
பொது ஆயிற்று.நான், நாம் என்பனவும் நான் நம்பி, நான் நங்கை, நான் பறவை, நாம் மக்கள், நாம் பறவைகள் என வரும்.
முன்னிலையில் வரும் நீ, நீர், நீயிர், நீவிர், எல்லீர் ஆகிய ஐந்தும் இருதிணைக்கும் பொதுவாகும்.
நீ நம்பிநீ நங்கைநீ அன்னம்நீர் மக்கள்நீர் அன்னங்கள்நீ என்ற முன்னிலை ஒருமைப் பெயர் இருதிணை ஒருமை மூன்றிற்கும் பொது ஆயிற்று. நீர் என்ற முன்னிலைப் பன்மைப்பெயர் இரு திணைப் பன்மைக்கும் பொது ஆயிற்று.
எல்லீர், நீயிர், நீவிர் என்பனவும் இவ்வாறே இருதிணைக்கும் பொதுவாக வரும்.
படர்க்கையில் வரும் தாம், தான் ஆகிய இரண்டும் இரு திணைக்கும் பொதுவாகும்.
அவர் தாம்அவை தாம்தாம் என்னும் படர்க்கைப் பெயர் இருதிணைப் பன்மைக்கும் பொது ஆயிற்று
அவன்தான்அவள்தான்அதுதான்தான் என்னும் படர்க்கைப் பெயர் இருதிணை ஒருமை மூன்றற்கும் பொது ஆயிற்று
‘எல்லாம்’ என்பது மூவிடப் பொதுப்பெயராகும். இது இரு திணைப் பன்மைக்கும் பொதுவாகும்.
நாம் எல்லாம்நீவிர் எல்லாம்அவர் எல்லாம்அவை எல்லாம்எல்லாம் என்னும் மூவிடப் பொதுப் பெயர் மூவிடங்களுக்கும் பொது ஆயிற்று. இருதிணைப் பன்மைக்கும் பொது ஆயிற்று.
4.2.9 பொதுப்பெயர்கள் வினைச்சொல் கொண்டு பால் உணர்த்தும்
பொதுப்பெயர்கள் தம்மோடு சேர்ந்து வரும் பெயர் கொண்டும் வினைகொண்டும் இன்னபால் என அறியப்படும் என முன்னர்க் கண்டோம். இதுவரை நாம் கண்ட எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொல் கொண்டு பால் தெளிவுபடுவதைக் கண்டோம். இனி, தொடர்ந்து வரும் வினைச்சொல் மூலம் பொதுப்பெயர் பால் உணர்த்துவதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.
சாத்தன் வந்தான்- உயர்திணை ஆண்பால்சாத்தன் வந்தது- அஃறிணையில் ஆண்பால்குழந்தையைத் தேடித் தாய்
வந்தாள்- உயர்திணைப் பெண்பால்கன்றைத் தேடித் தாய் வந்தது- அஃறிணையில் பெண்பால்
தான் சொன்னான்- உயர்திணை ஆண்பால்தான் செய்தாள்- உயர்திணைப் பெண்பால்தான் மேய்ந்தது- அஃறிணை ஒன்றன்பால்