தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- தொகுப்புரை

  • 3.4 தொகுப்புரை

    இப்பாடத்தில் ஆங்கிலேயர் என்னென்ன முயற்சிகள் செய்து நாடுகளை ஒருங்கிணைத்தார்கள் என்பதைப் பற்றியும், அங்குச் சீரியதொரு அரசாங்கத்தினை நிறுவ முற்பட்டனர் என்பதைப் பற்றியும் படித்து உணர்ந்திருப்பீர்கள்.

    ஆங்கிலேயர் சட்டம் மற்றும் நீதித் துறையில் கவனம் செலுத்தியது பற்றிப் படித்திருப்பீர்கள்.

    தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியினால் என்னென்ன புதுவிதமான மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றியும் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    கி.பி. 1876இல் எங்குச் செயற்கைத் துறைமுகம் அமைக்கப்பட்டது?
    2.
    பஞ்சமும் ஏழ்மையும் எந்த நூற்றாண்டில் ஏற்பட்டன?
    3.
    தமிழர் எந்தெந்த நாடுகளுக்குப் பிழைப்புத் தேடிச் சென்றனர்?
    4.
    தமிழர் அயல்நாடுகளில் எங்கெல்லாம் வேலை செய்தனர்?
    5.
    எதனால் இந்திய மக்களுக்குச் சுதந்திர வேட்கை ஏற்பட்டது?
    6.
    இந்திய தேசியக் காங்கிரஸில் தொடக்கத்தில் எத்தனை உறுப்பினர் இருந்தனர்?
புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 16:53:35(இந்திய நேரம்)