Primary tabs
-
3.3 இசை நிறை
இசை நிறை என்பது வேறு பொருளை உணர்த்தாது
செய்யுளில் ஓசையை நிறைத்து (முழுமையாக்கி) நிற்பது,
இசைநிறைக்கும் இடைச் சொற்களாக ஏ, ஒடு, தெய்ய -
ஆகியன குறிக்கப்படுகின்றன.ஏகார இடைச் சொல் ஆறு பொருளில் வரும் என்பதை
முன்னரே கண்டோம். அவற்றில் ஒன்று இசைநிறை
என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.எடுத்துக்காட்டு
‘எழுத்து அது முதல் சார்பென விரு வகைத்தே’
(நன் - 58)
• ஒடு - இசைநிறைத்தல்ஒடு என்னும் இடைச்சொல் வேறு பொருள் தராது இசை
நிறைக்க வந்துள்ளது.எடுத்துக்காட்டு
‘விதைக்குறு வட்டில் போதொடு பொதுள’
விதை உடைய தட்டில் மலர் நிறைந்துள்ளது என்பது இதன்
பொருள். இங்கு ஒடு என்பது வேறு பொருள் தராது
இசைநிறைத்தது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I